தேசிய பெண் வாக்குரிமை சங்கம்
From Wikipedia, the free encyclopedia
தேசிய பெண் வாக்குரிமை சங்கம் (National Woman Suffrage Association) சுருக்கமாக:NWSA) பெண்களின் வாக்குரிமைக்காக மே 15, 1869 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கப்பட்டது. அதன் முக்கிய தலைவர்கள் சூசன் பி. அந்தோனி மற்றும் எலிசபெத் கேடி ஸ்டாண்டன் ஆவார். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட பதினைந்தாவது திருத்தத்தின் மீது பெண்கள் உரிமைகள் இயக்கம் பிளவுபட்ட பிறகு இது உருவாக்கப்பட்டது. இது கறுப்பின ஆண்களுக்கும் வாக்களிக்கும் உரிமைக்காகவும் போராடியது.
சுருக்கம் | NWSA |
---|---|
பின்னோர் | தேசிய அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம் (NAWSA) |
உருவாக்கம் | 1869 |
கலைக்கப்பட்டது | 1890 |
முக்கிய நபர்கள் | சூசன் பி. அந்தோனி, எலிசபெத் கேடி ஸ்டாண்டன் |
பெண்களின் வாக்களிக்கும் உரிமைக்கான பிரச்சாரத்தில் தேசிய பெண் வாக்குரிமை சங்கம், முதன்மையாக கூட்டாட்சி மட்டத்தில் வேலை செய்தது. 1870களின் முற்பகுதியில், அது பெண்களை வாக்களிக்க முயற்சிக்கும் மற்றும் தடுக்கப்பட்டால் வழக்குகளைத் தாக்கல் செய்ய ஊக்குவித்தது. ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சமமான பாதுகாப்பிற்கான உத்தரவாதங்கள் மூலம் பெண்களுக்கு மறைமுகமாக உரிமையளித்தது என்று வாதிட்டது. பல பெண்கள் வாக்களிக்க முயன்றனர். குறிப்பாக சூசன் பி. அந்தோனி, கைது செய்யப்பட்டு பரவலாக விளம்பரப்படுத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார். அமெரிக்க அரசியலமைப்பு பெண்களுக்கு மறைமுகமாக உரிமையளிக்கவில்லை என்று ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, இச்சங்கம் வெளிப்படையாக அவ்வாறு செய்யும் ஒரு சட்டத் திருத்தத்திற்காக போராடியது.
தேசிய பெண் வாக்குரிமை சங்கம் மற்றும் அதன் தலைவர்கள் பன்னாட்டு பெண்கள் அமைப்புடன் பணிபுரிந்தனர். 1890ம் ஆண்டில் தேசிய பெண் வாக்குரிமை சங்கம் அதன் போட்டியாளரான அமெரிக்கப் பெண் வாக்குரிமை சங்கத்துடன் இணைந்தபோது, அந்தோனி மற்றும் ஸ்டாண்டனின் தலைமையில் அமெரிக்க பெண் வாக்குரிமை சங்கம்[1] நிறுவப்பட்டது. இச்சங்கம் 1890ல் கலைக்கப்பட்ட போதிலும், 5 சூன் 1920 அன்று ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தில் 19ம் திருத்தம்[2][3] மேற்கொள்ளப்பட்டு பெண்கள் வாக்குரிமை மற்றும் கருப்பு நிறத்தவர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.