தேஜோபிந்து உபநிடதம்
யோகக் கலையைப் பற்றிய இந்து சமய உரை / From Wikipedia, the free encyclopedia
தேஜோபிந்து உபநிடதம் ( Tejobindu Upanishad ) என்பது சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் உபநிடத நூல்களின் தொகுப்பில் உள்ள ஒரு சிறிய உபநிடதம் ஆகும்.[1] ஐந்து பிந்து உபநிடதங்களில் ஒன்றான இது அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [2] மேலும், நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்களில் ஒன்றாகும்.[3][4]
விரைவான உண்மைகள் தேஜோபிந்து உபநிடதம், தேவநாகரி ...
தேஜோபிந்து உபநிடதம் | |
---|---|
Tejobindu states meditation is difficult but empowering | |
தேவநாகரி | तेजोबिन्दु |
தொடர்பான வேதம் | யசுர் வேதம் அல்லது அதர்வண வேதம் |
பாடல்களின் எண்ணிக்கை | பிரதிகளால் மாறுபட்டுள்ளது |
அடிப்படைத் தத்துவம் | யோகக் கலை, வேதாந்தம் |
மூடு
தியானத்தில் கவனம் செலுத்துவது, புத்தகக் கற்றலுக்கான அர்ப்பணிப்பை குப்பை என்று அழைப்பது, அதற்குப் பதிலாக பயிற்சியை வலியுறுத்துவது மற்றும் யோகா கண்ணோட்டத்தில் வேதாந்தக் கோட்பாட்டை முன்வைப்பது ஆகியவற்றிக்காக இந்த உரை குறிப்பிடத்தக்கது. [5] இது 108 உபநிடதங்களின் நவீன காலத் தொகுப்பில் இராமனால் அனுமனுக்கு கூறப்பட்ட முக்திகா நியதியின் வரிசை வரிசையில் 37 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. [6]