தோகா ஒப்பந்தம், 2020
From Wikipedia, the free encyclopedia
தோகா ஒப்பந்தம் (2020) (Doha Agreement (2020), இதனை ஆப்கானித்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் என்றும் அழைப்பர். இது ஐக்கிய அமெரிக்க நாடு மற்றும் தாலிபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் 29 பிப்ரவரி 2020 அன்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். [2]இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானித்தான் அதிபர் அஷ்ரப் கனியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி சல்மாய் கலீல்சாத் மற்றும் தாலிபான் பிரதிநிதி அப்துல் கனி பராதர் கையெழுத்திட்டனர். [3] [4]இந்த ஒப்பந்தப்படி, ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை 14 மாதங்களுக்குள் (31 ஆகஸ்டு 2021) விலக்கப்படும் என்றும், அதுவரை தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தா படைகள் அமெரிக்கப்படைகளை தாக்குவதில்லை என உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சீனா, ருசியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை வரவேற்றது. [5]
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான் ஒப்பந்தம் | |
---|---|
29 பிப்ரவரி 2020 அன்று தோகாவில் அமெரிக்காவின் பிரதிநிதி சல்மாய் கலீல்சாத் (இடது) மற்றும் தாலிபான் பிரதிநிதி அப்துல் கனி பராதர் (வலது) ஆப்கான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி | |
ஒப்பந்த வகை | அமைந்தி ஒப்பந்தம் |
அமைப்பு | ஆப்கானித்தானில் போர் (2001-2021)[1] |
கையெழுத்திட்டது | 29 பெப்ரவரி 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-02-29) |
இடம் | செரட்டன் கிராண்ட் தோகா விடுதி, தோகா, கத்தார் |
கையெழுத்திட்டோர் | சல்மாய் கலீல்சாத் அப்துல் கனி பராதர் |
தரப்புகள் | ஐக்கிய அமெரிக்கா தாலிபான் |
மொழிகள் | |
முழு உரை | |
ஆப்கானித்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் விக்கிமூலத்தில் முழு உரை |