நான்காம் அலைப் பெண்ணியம்
2012 இல் தொடங்கிய பெண்ணிய இயக்கக் கட்டம் / From Wikipedia, the free encyclopedia
நான்காம் அலைப் பெண்ணியம் (Fourth-wave feminism) 2012 ஆம் ஆண்டில் தோன்றிய பெண்னியக் கட்டமாகும். இது மகளிரை அதிகாரப்படுத்தலில் கவனம் குவிக்கிறது. இணைய ஊடகங்களைப் பயன்படுத்துகிறது.[1] பிரிவிடை உறவை மையப்படுத்திய,[2] இந்த நான்காம் அலை அதிகாரக் கட்டமைப்பின் சமூக அடுக்குகள்வழி விளிம்புநிலைகளையும் உருவாக்கும் ஊடிணைவு அமைப்புகளை ஆய்வுசெய்ய முயல்கிறது. நான்காம் அலைப் பெண்ணிய்யர்கள் விளிம்புநிலைக் குழுவை அரசியலிலும் வணிகத்திலும் கூடுதல் பேராண்மை பெற பாடுபடுகின்றனர். சமூகம் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலையும் நடைமுறைகளையும் பின்பற்றினால் கூடுதலான சமவாய்ப்பு கிடைக்கும் என இவர்கள் வாதிடுகின்றனர்.[2]
முந்தைய பெண்ணியர்கள் பொருளீட்டும் மகளிருக்கான் விடுதலை, தனியர்நலம், சமூக இயங்குதளத்துக்காகப் போராடினர்; ஆனால், நான்காம் அலைப் பெண்ணியர்கள் பாலியல் தாக்கல், பாலியல் வன்முறை, சம வேலைக்குச் சம ஊதியம், தம் உடல்சார்ந்த முற்றுரிமை ஆகிய நிகழ்ச்சிநிரலுக்காகப் போராடுகின்றனர்.[3]
நான்காம் அலைப் பெண்ணியர்கள் அச்சு, செய்தி, சமூக ஊடகம் ஆகிய அனைத்து தொடர்பாடல்களையும் இணைவாகப் பயன்படுத்தி, மகளிரையும் மக்களையும் அணிதிரட்டுகின்றனர்; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து பேசுகின்றனர்; சிறுமியருக்கும் மகளிருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டுமெனப் போராடுகின்றனர்.பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டுமன்றி, நான்காம் அலைப் பெண்ணியர்கள் சிறுவர், சிறுமியர் வளர்ச்சியில் பெற்றோருக்கு இருக்கவேண்டிய ஆழ்ந்த அக்கறை, உறவு பற்றியும் கவலைபட்டனர்; ஆண்சிறார், ஆடவர் தம் விருப்பங்களையும் எண்ணக் கிடக்கைகளையும் உணர்வுகளையும் வெளியிட கூடுதலான வாய்ப்புகளை பொது சமூகவெளி இடந்தரவேண்டும் என வாதிட்டனர்.[4]