நாளமுள்ள சுரப்பி
From Wikipedia, the free encyclopedia
நாளமுள்ள சுரப்பிகள் பொருட்களை உற்பத்தி செய்து நாளங்கள் வழியாகஎபிதீலியத்தின் மேற்பரப்பில் சுரக்கின்றன.[1] வியர்வை, உமிழ்நீர், பால், காது குரும்பி, கண்ணீர், எண்ணெய் மற்றும் சளி ஆகியவை நாளமுள்ள சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.மனித உடலில் உள்ள இரண்டு வகை சுரப்பிகளில் ஒன்று நாளமுள்ள சுரப்பிகள், மற்றொன்று நாளமில்லா சுரப்பிகள். நாளமில்லா சுரப்பிகள் த ங்கள் சுரப்பை நேரடியாக இரத்த ஓட்டத்தில் சுரக்கின்றன. கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவை நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளாக செயல்படுகின்றன. ஏனென்றால் இவற்றால் சுரக்கப்படும் பித்த நீர் மற்றும் கணைய நீர் நாளங்கள் வழியாக இரைப்பை குடல் பாதைக்கு செல்வதால் நாளமுள்ள சுரப்பியாகவும் பிற சுரப்புகள் நேரடியாக இரத்தத்திலும் கலப்பதால் நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் நாளமுள்ள சுரப்பி, விளக்கங்கள் ...
நாளமுள்ள சுரப்பி | |
---|---|
அசினஸ் என்பது ஒரு குழாயுடன் இணைக்கப்பட்ட சுரப்பிச் செல்களின் வட்ட கொத்து ஆகும் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | கிளான்ட் எக்ஸோகிரைன் (glandula exocrina) |
MeSH | D005088 |
TH | TH {{{2}}}.html HH2.00.02.0.03014 .{{{2}}}.{{{3}}} |
FMA | 9596 |
உடற்கூற்றியல் |
மூடு