நித்யா கிருஷிந்தா மகேசுவரி
இந்தோனேசியவைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
நித்யா கிரிஷிந்தா மகேசுவரி கோர்வா (Nitya Krishinda Maheswari Korwa) (பிறப்பு: திசம்பர் 16, 1988) இந்தோனேசியவைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜெய ராயா ஜகார்த்தாவுடன் இணைந்து விளையாடிய. இரட்டையர் போட்டியில் நிபுணத்துவம் பெற்றவர். 2011 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பெண்கள் இரட்டையர் தங்கப் பதக்கங்களை வென்றார்.
நித்யா கிருஷிந்தா மகேசுவரி | |
---|---|
2013இல் நட்ந்த பிரஞ்ச் ஓபன் சூப்பர்சீரிஸ் போட்டியில் மகேசுவரி | |
நேர்முக விவரம் | |
பிறப்பு பெயர் | நித்யா கிருஷிந்தா மகேசுவரி கோர்வா[1] |
நாடு | இந்தோனேசியா |
பிறப்பு | 16 திசம்பர் 1988 (1988-12-16) (அகவை 35) பிலித்தார், கிழக்கு சாவகம், இந்தோனேசியா |
உயரம் | 1.68 மீ |
ஓய்வு பெற்றது | 2018 |
கரம் | வலது |
மகளிர் இரட்டையர் பிரிவு | |
பெரும தரவரிசையிடம் | கிரேசியா பாலியுடன் இணைந்து 2 முறை (10 மார்ச் 2016) |
இ. உ. கூ. சுயவிவரம் |
மகேசுவரி 2009 உலக வாகையாளர் போட்டியில் பங்கேற்றார். அதில் இவர் கிரேசியா பாலியுடன் இணைந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் 9வது இடத்தைப் பிடித்தார். 2011-இல், தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் அன்னேக் பெய்ன்யா அகஸ்டினுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றார். [2] 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாலியுடனான மகளிர் இரட்டையர் தங்கப் பதக்கத்தையும் வென்றார். [3]
2015 கொரியா ஓபனில் கிரேசியா பாலியுடன் இணைந்து தனது முதல் சூப்பர்சீரிஸ் பட்டத்தை வென்றார். [4]
2016-இல், இவரும் அவரது கூட்டாளியான கிரேசியா பாலியும் பிடபிள்யுஎப் சூப்பர்சீரிஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இருப்பினும், மகேசுவரிக்கு திட்டமிடப்பட்ட முழங்கால் அறுவை சிகிச்சையின் காரணமாக அவர்கள் போட்டியில் இருந்து விலகினர். மேலும் அவர்களின் இடத்திற்கு விவியன் ஹூ மற்றும் வூன் கே வெய் ஆகியோர் மாற்றப்பட்டனர். [5]