நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
2006 மக்கள் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக [1] நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், 28 மே 2008ல் நேபாள நாட்டை சமயச்சார்பற்ற, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு[2] (Federal Democratic Republic of Nepal) என அறிவித்தது.[3][4] இதனால் 240 ஆண்டுகால நேபாள மன்னராட்சி முடிவிற்கு வந்தது. மேலும் இதனை தற்காலிக நேபாள அரசியலமைப்புச் சட்டமும் உறுதிப்படுத்தியது.
நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் பிரதம அமைச்சராக கிரிஜா பிரசாத் கொய்ராலா 28 மே 2008 அன்று பொறுப்பேற்றார்.[5][6][7] நேபாளி காங்கிரஸ் கட்சியின் கிரிஜா பிரசாத் கொய்ராலா 18 ஆகஸ்டு 2008 அன்று பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியின் பிரசந்தா என்ற புஷ்ப கமல் தகால், 18 ஆகஸ்டு 2008 அன்று பிரதம அமைச்சராக பதவியேற்றார்.[6][7]
நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ், 23 சூலை 2008 அன்று பொறுப்பேற்றார்.