பகாய் சமயம்
From Wikipedia, the free encyclopedia
பஹாய் சமயம் 1844-இல், பாரசீக நாட்டின் ஷிராஸ் நகரில் பாப் என்பவர் (இயற்பெயர் சையிட் அலி முகம்மது) எல்லா மதங்களாலும் வாக்களிக்கப்பட்ட இறைத்தூதர் தாமே என பிரகடனப்படுத்தினார்.[1] அது மட்டுமின்றி, தாம் தமக்குப் பின் வரவிருக்கும் ஒரு மாபெரும் இறை அவதாரத்தின் முன்னோடி எனவும் கூறினார்.[2] இதைத் தொடர்ந்து 1863-இல் பஹாவுல்லா (கடவுளின் ஜோதி), (இயற்பெயர் மிர்சா ஹுசேய்ன் அலி) இராக் நாட்டின் பாக்தாத் நகரில், பாப் அவர்களால் முன்கூறப்பட்ட அந்த இறை அவதாரம் தாமே என பகிரங்கமாக அறிவித்தார்.[3] அவ்வறிப்பைத் தொடர்ந்து பஹாவுல்லாவை ஏற்றுக்கொண்ட பாப் அவர்களின் நம்பிக்கையாளர்கள் அதுமுதல் பஹாய்கள் என அழைக்கப்பட்டு,[4] இன்று உலகம் முழுவதும் சுமார் 7 மில்லியன் பஹாய் நம்பிக்கையாளர்கள்[5] உள்ளனர்.
பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை தான் நிறைவுச் செய்வதாக கருதினார்.[1]
பஹாய் (IPA: [baˈhaːʔiː]) என்பது சமயத்தையோ அல்லது அதனை பின்பற்றுபவர்களையோ குறிக்கும் முகமாக தமிழில் பயன்படுத்தப்படுகிறது. பஹாய் (بهاء) என்பது இறைவனின் ஒளி எனப் பொருள்படும் அரபு மொழிப் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[2] "பஹாயிசம்" போன்றவை முன்னர் பயன்பட்டாலும் அவை பயன்பாட்டிலிருந்து அறுகிவருகின்றன. (பகாய் இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை)