பகாவுல்லா
From Wikipedia, the free encyclopedia
பகாவுல்லா (Bahá'u'lláh, ba-haa-ol-laa அரபு மொழி: بهاء الله) "கடவுளின் புகழ்", நவம்பர் 12, 1817 – மே 29, 1892), பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவர் பாரசீக நாட்டின் தெஹரான் நகரத்தின் மேல்குடிகளில் ஒருவராவார். இவரது இயற்பெயர் மிர்சா உசேய்ன் அலி. பத்தொன்பதாம் நூற்றாண்டில், அரச போகம் மற்றும் பாதுகாப்பைத் துறந்து, பெருந்துன்பம் மற்றும் இல்லாமைக்கிடையே, ஒற்றுமை மற்றும் ஐக்கியம் குறித்த மனம் நெகிழச் செய்கின்ற செய்தி ஒன்றை மனுக்குலத்திற்கு அளித்தார். 1863 ஆம் ஆண்டு இவர் பாப் என்பவரால் கூறப்பட்ட இறைவனின் அவதாரம் தாமே என அறிவித்தார். பஹாவுல்லா பல சமய நூல்களையும் எழுதினார்.
விரைவான உண்மைகள் பகாவுல்லாBahá'u'lláh, பிறப்பு ...
பகாவுல்லா Bahá'u'lláh | |
---|---|
பஹாவுல்லா ஆலயம் | |
பிறப்பு | மிர்சா உசைன்-அலி நூரி (1817-11-12)நவம்பர் 12, 1817 தெகுரான், பாரசீகம் (இன்றைய ஈரான்) |
இறப்பு | மே 29, 1892(1892-05-29) (அகவை 74) ஏக்கோ, உதுமானியப் பேரரசு (இன்றைய இசுரேல்) |
கல்லறை | 32°56′36″N 35°05′32″E |
அறியப்படுவது | பகாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் |
பின்வந்தவர் | அப்துல்-பாகா |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் |
|
மூடு
இவர் பாலஸ்தீனத்தில் (தற்போது இஸ்ரேலில் பாஹ்ஜி என்ற இடத்தில் மறைந்தார்.