பண்டா இராச்சியம்
இந்திய துணைக்கண்டத்தில் இருந்த சமஸ்தானம் / From Wikipedia, the free encyclopedia
பண்டா இராச்சியம் (Banda state) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின், புந்தேல்கண்ட் பகுதியில் 1790 முதல் 1858-ஆண்டு முடிய செயல்பட்ட ஒரு சுதேச சமஸ்தானம் ஆகும். பண்டா இராச்சியம் மராட்டியப் பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. இந்த இராச்சியத்தை நிறுவியவர் முதலாம் அலி பகதூர் (1790–1802) ஆவார். பிரித்தானிய இந்தியாவிற்கு எதிரான 1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாம் விடுதலைப் போராட்டத்தில் பண்டா இராச்சியமும் பங்கேற்றினர். மேலும் அவகாசியிலிக் கொள்கையின் படி இந்த இராச்சியம் 1858-ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டு பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[1]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b6/Bhuragarh_fort_front.jpg/220px-Bhuragarh_fort_front.jpg)
1881-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பண்டா இராச்சியத்தின் மக்கள் தொகை 6,98,608 ஆகும்.[2]