பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்
From Wikipedia, the free encyclopedia
பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள் (Ancient Egyptian funerary practices), எகிப்தின் துவக்க கால (கிமு 3150 - கிமு 2686) அரச குடும்பத்தினரின் இறந்த உடல்களுக்கு விரிவான இறுதிச் சடங்குகள் செய்தனர். எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கை இருப்பதாக உறுதியாக நம்பியதால், மரணத்திற்கு பிறகும் உடல் மற்றும் உயிரின் அழியாமையை உறுதிப்படுத்த மந்திரங்களுடன் சடங்குகள் செய்வதுடன், இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி, சவப்பெட்டியில் வைத்து, மம்மியின் மூடி மீது மந்திர எழுத்துக்களை பொறிப்பதுடன், இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இறந்தவர்களுக்கான உணவு வகைகளுடன் கல்லறைக் கோயிலில் வைத்தனர்.[1][2]பழைய எகிப்திய இராச்சிய காலத்தில்தான் (கிமு 2686–கிமு 2181) இறந்தவர் சடலங்களை மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் தோன்றியது. பின்னர் பிரமிடுகள் கட்டாது, நைல் நதியின் மேற்குப் பகுதிகளில் உள்ள மலைக்குன்றுகளில் உள்ள மன்னர்களின் சமவெளி மற்றும் அரசிகளின் சமவெளிகளில் இறந்த அரச குடும்பத்தினர் உடல்களை அடக்கம் செய்யும் வழக்கம் தோன்றியது. மேலும் பிரமிடு அருகே இறந்தவர்கள் வழிபட நினைவுக் கோயில்கள் எழுப்பினர்.
பழங்கால எகிப்திய அடக்கம் செயல்முறை காலப்போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து, பழைய பழக்கவழக்கங்கள் நிராகரிக்கப்பட்டு புதியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன, ஆனால் இந்த இறப்புச் செயல்முறைகளில் பல முக்கிய கூறுகள் நீடித்தன. குறிப்பிட்ட விவரங்கள் காலப்போக்கில் மாறினாலும், இறந்த உடலை மம்மிப்படுத்தல், மந்திரச் சடங்குகள் செய்வது மற்றும் கல்லறையில் பொருட்கள் வைப்பது போன்ற வழக்கம் பிந்தைய கால எகிப்திய இராச்சியம் வரை தொடர்ந்தன.