பனாப்பெருமம்
From Wikipedia, the free encyclopedia
பனாப்பெருமம் (Panamax), புதுப்பனாப்பெருமம் (Neopanamax) என்பன பனாமாக் கால்வாய் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான அளவு வரையறைகளைக் குறிக்கும் தரப்பாடு ஆகும். முன்னர் இந்த அளவு வரையறைகளும் பிற தேவைகளும் "கப்பல்களுக்கான தேவைகள்" என்னும் தலைப்பில் பனாமாக் கால்வாய் ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.[1] இந்த ஆவணத்தில், அதிவறட்சிப் பருவகால வரையறைகள், உந்துகை, தொலைத்தொடர்பு, விபரமான கப்பல் வடிவமைப்பு போன்றவை குறித்த விடயங்களும் இடம்பெற்றிருந்தன.
பொது இயல்புகள் பனாப்பெருமம் | |
---|---|
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
நிறை: | 52,500 DWT |
நீளம்: | 289.56 m (950 அடி) |
வளை: | 32.31 m (106 அடி) |
உயரம்: | 57.91 m (190 அடி) |
பயண ஆழம்: | 12.04 m (39.5 அடி) |
கொள்ளளவு: | 5,000 TEU |
குறிப்புகள்: | Opened 1914 |
பொது இயல்புகள் புதுப்பனாப்பெருமம் | |
---|---|
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
நிறை: | 1,20,000 DWT |
நீளம்: | 366 m (1,201 அடி) |
வளை: | 49 m (161 அடி) |
உயரம்: | 57.91 m (190 அடி) |
பயண ஆழம்: | 15.2 m (50 அடி) |
கொள்ளளவு: | 13,000 TEU |
குறிப்புகள்: | Opened 2016 |
ஏற்புடைய அளவுகள், கால்வாய்ப்பூட்டு அறையின் நீளமும் அகலமும், கால்வாயில் உள்ள நீரின் ஆழம் ஆகியவற்றில் தங்கியிருந்தது. கால்வாய்க்குக் குறுக்கே அமெரிக்காக்கள் பாலம் அமைக்கப்பட்டபின் அதன் உயரமும் அளவுகளைத் தீர்மானிக்கும் ஒரு காரணியானது. இத்தரப்பாடு பனாமாக் கால்வாயூடாகச் செல்லக்கூடிய கப்பல்களுக்கான அளவுகளுக்கான தெளிவான வரையறைகளைத் தருவதால், இது சரக்குக் கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றின் வடிவமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பனாப்பெருமத் தரப்பாடு 1914ல் பனாமாக் கால்வாய் திறக்கப்பட்ட காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்தது. 2009ல் பனாமாக் கால்வாய் ஆணையம் புதுப்பனாப்பெருமத் தரப்பாட்டை வெளியிட்டது.[2] இது முன்னைய இரண்டு கால்வாய்ப்பூட்டுக்களிலும் பெரிதான மூன்றாம் கால்வாய்ப்பூட்டுத் தொகுதி திறக்கப்பட்ட 26 யூன் 2016ல் இருந்து புழக்கத்துக்கு வந்தது.
அதிகூடிய அளவுகளைக் கொண்ட கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கால்வாயில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பனாப்பெருமக் கப்பல்கள் கால்வாயுடன் நெருக்கமான பொருந்துதன்மை கொண்டவையாக இருப்பதால், கால்வாய்ப்பூட்டுகளுக்குள் துல்லியமான கட்டுப்பாடு தேவையாக உள்ளது. இதனால் பூட்டுகளுக்குள் கப்பல்கள் அதிக நேரம் செலவிடவேண்டி இருப்பதுடன், பயணம் பகலிலேயே நடைபெறவேண்டியும் உள்ளது. இங்கு அமைந்துள்ள குலேபிரா வெட்டுப் பகுதியில், எதிர்த் திசைகளில் வரும் பெரிய கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாததால், கால்வாய் ஒன்றுவிட்டு ஒரு நாள் மாறிமாறி ஒருவழிப் பாதையாகவே செயற்படவேண்டியும் உள்ளது.