பனீர் மட்டர்
From Wikipedia, the free encyclopedia
பனீர் மட்டர் (Mattar paneer)( இந்தி: मटर पनीर ), என்பது பன்னீர் மட்டர், பனீர் மட்டீர் எனவும் அழைக்கப்படுகிறது.[2][3] இது வட இந்திய உணவு ஆகும். பஞ்சாபிய உணவு முறையில் முக்கியமான[4] இந்த உணவு பட்டாணி, பனீர், தக்காளி சார்ந்த சாஸ்,[5] கரம் மசாலா சேர்த்து தயார் செய்யப்படுகிறது.
விரைவான உண்மைகள் தொடங்கிய இடம், பகுதி ...
பனீர் மட்டர், சேர்க்கைப் பொருட்களுடன் | |
தொடங்கிய இடம் | இந்தியா |
---|---|
பகுதி | வட இந்தியா[1] |
முக்கிய சேர்பொருட்கள் | பனீர், பட்டாணி, தக்காளி சாசு, கரம் மசலா தூள் |
மூடு
பனீர் மட்டர் பெரும்பாலும் அரிசிச் சோறு மற்றும் இந்திய வகை ரோட்டியுடன் பரிமாறப்படுகிறது. இந்திய ரோட்டியானது நான், பராத்தா, பூரி அல்லது ரொட்டி என இடத்திற்கு தக்கவாறு அழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு (ஆலு), சோளம், தயிர் அல்லது களிம்பு போன்ற பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது.[6][7]