பாலாஜி பாஜி ராவ்
From Wikipedia, the free encyclopedia
பாலாஜி பாஜி ராவ் (Balaji Baji Rao) (1720 – 1761), நானாசாகிப் என்றும் அழைக்கப்படும் பேஷ்வா பாஜிராவின் மகனும், மராத்தியப் பேரரசின் ஐந்தாம் பேஷ்வாவும் ஆவார். இவரது பணிக்காலத்தில் மராத்தியப் பேரரசு உச்சக் கட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.
பாலாஜி பாஜி ராவ் | |
---|---|
பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் | |
மராத்தியப் பேரரசின் ஐந்தாம் பேஷ்வா | |
பதவியில் 4 சூலை 1740 – 23 சூன் 1761 | |
ஆட்சியாளர்கள் | சத்திரபதி சாகுஜி சத்திரபதி இரண்டாம் இராஜாராம் |
முன்னையவர் | பேஷ்வா பாஜிராவ் |
பின்னவர் | பேஷ்வா மாதவராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 டிசம்பர் 1720 புனே |
இறப்பு | 23 சூன் 1761 பார்வதி மலை, புனே |
துணைவர் | கோபிகாபாய் |
உறவுகள் | இரகுநாதராவ் (சகோதரன்) |
பிள்ளைகள் | விஸ்வாஸ்ராவ் நாராயணராவ் |
பெற்றோர் | பாஜிராவ் காசிபாய் |
பாலாஜி பாஜி ராவின் இறுதிக் காலத்தில், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானியின் படைகளுக்கு எதிராக நடந்த மூன்றாம் பானிபட் போரில், மராத்தியப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மராத்தியர்களின் செல்வாக்கு சரிந்தது.
மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசின் பெரும் பகுதிகளை, ஓல்கர், போன்சுலே, சிந்தியா, கெயிக்வாட் போன்ற மராத்திய குலப் படைத்தலைவர்கள் குவாலியர், பரடோ, இந்தூர், நாக்பூர் இராச்சியங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் இவர்கள் பேஷ்வா]]வின் ஆலோசனையின் படி, மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்கினர்.[1]