பிரம்மா
நான்முகன் / From Wikipedia, the free encyclopedia
பௌத்த மத பிரம்மாவுக்கு காண்க பிரம்மா (பௌத்தம்)
பிரம்மா (சமஸ்கிருதம்: ब्रह्मा) இந்து கடவுள்களான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் விஷ்ணுவும், சிவனும் ஆவர். பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் சரஸ்வதியுடன் சத்ய லோகத்தில் வசிப்பவர். இவரின் மனதிலிருந்து முதலில் தோன்றிய, சனகாதி முனிவர்கள் என நான்கு மகன்கள் இல்லற தர்மத்தை கடைப்பிடிக்காது துறவறத்தில் ஈடுபட்டு ஞானிகளாக மாறிவிட்டனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து படைத்தல் தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது.[1]
விரைவான உண்மைகள் பிரம்மா, தமிழ் எழுத்து முறை ...
பிரம்மா | |
---|---|
அன்னவாகனத்தில் பிரம்மன் | |
தமிழ் எழுத்து முறை | பிரம்மன், நான்முகன், வேதவன் |
இடம் | பிரம்ம லோகம் |
துணை | சரஸ்வதி, காயத்திரி |
மூடு
இந்த தெய்வத்தை வேதாந்தத்தில் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவும், ஒரே மெய்ப்பொருளாகவும் சொல்லப்படும் பிரம்மத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது.