பிரம்ம சூத்திரம்
From Wikipedia, the free encyclopedia
பிரம்ம சூத்திரம் :- சூத்திரம் என்றாலே சுருங்கக்கூறுவது. மிகப்பெரிய உண்மைகளை மிகச் சில சொற்களால் சொல்கிறது பிரம்ம சூத்திரம். எது உபநிடதங்களில் உள்ளதோ, எதுவெல்லாம் கீதையில் பேசப்பட்டதோ அதுவெல்லாம் பிரம்ம சூத்திரத்தில் அடக்கம். அண்டத்தில் உள்ளதை அணுவாக்கித் தந்திருக்கிறார் வியாசர். உபநிடதங்களில் சொல்லப்படுபவற்றை ஒழுங்கமைத்துச் சுருக்கி விளங்கவைக்கும் முயற்சியில் இயற்றப்பட்ட நூல். இதன் ஆசிரியர் வியாசர் எனும் பாதராயணர் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது. பகவத்கீதையில் பிரம்ம சூத்திரம் தொடர்பான குறிப்புகள் வருவதால் இது கீதைக்கும் முற்பட்டதெனத் தெளிவாகிறது.
இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களில், பிரம்ம சூத்திரமும் ஒன்றாகும்.