போர்னியோ தீவில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த நிலப்பகுதிகள் From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய போர்னியோ (ஆங்கிலம்: British Borneo; மலாய் மொழி: Borneo British சீனம்: 英屬婆羅洲; இடச்சு மொழி: Brits-Borneo); என்பது போர்னியோ தீவில் பிரித்தானியர்கள் ஆட்சி செய்த நான்கு நிலப்பகுதிகளின் அழைப்புப் பெயராகும்.[1]
1841-ஆம் ஆண்டு தொடங்கி 1984-ஆம் ஆண்டு வரை 143 ஆண்டுகளுக்கு, புரூணை; சபா; சரவாக்; லபுவான் ஆகிய நிலப்பகுதிகளை பிரித்தானியர்கள் தங்களின் ஆளுமைக் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.[2]
இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், 1946-ஆம் ஆண்டில் இருந்து, 1963-ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெறும் வரையில், சரவாக் மாநிலம் பிரித்தானியப் பேரரசின் முடியாட்சி காலனியாக (Crown Colony of Sarawak) இருந்தது.[3]
அத்துடன் லபுவான் பிரதேசம், 16-ஆம் நூற்றாண்டில் இருந்து 19-ஆம் நூற்றாண்டுத் தொடக்கக் காலம் வரையில், புரூணை பேரரசின் (Brunei Sultanate) பிரதேசமாக இருந்தது.
1846 திசம்பர் 18-ஆம் தேதி, புரூணையின் சுல்தான் சார்பில் உமார் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) எனும் புரூணை அரசப் பிரதிநிதி, லபுவான் ஒப்பந்தத்தில் (Treaty of Labuan) கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின் மூலமாக லபுவான் பிரதேசம், ஐக்கிய இராச்சியத்திற்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.[4]
1848-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் ஒரு நேரடி காலனியாக லபுவான் நிறுவப்பட்டது. அந்த வகையில் லபுவான் பிரதேசம், போர்னியோவின் ஆரம்பகால பிரித்தானிய காலனி என்றும் அறியப்படுகிறது.[5]
போர்னியோவில் இரண்டாம் உலகப் போருக்கு முன், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது (British Colonial Rule), சரவாக் மாநிலம் என்பது சரவாக் இராச்சியம் (Raj of Sarawak) என்று அழைக்கப்பட்டது. சரவாக் இராச்சியத்தின் வெள்ளை இராசாக்கள் 1841-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை சரவாக் மாநிலத்தை, 105 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.
அதன் பின்னர் 1848-ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியத்தின் ஒரு நேரடி காலனியாக லபுவான் நிறுவப்பட்டது. அந்த வகையில் லபுவான் பிரதேசம், போர்னியோவின் ஆரம்பகால பிரித்தானிய காலனி என்றும் அறியப்படுகிறது.[6]
போர்னியோவில் இரண்டாம் உலகப் போருக்கு முன், பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது (British Colonial Rule), சரவாக் மாநிலம் என்பது சரவாக் இராச்சியம் (Raj of Sarawak) என்று அழைக்கப்பட்டது. சரவாக் இராச்சியத்தின் வெள்ளை இராசாக்கள் 1841-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை சரவாக் மாநிலத்தை, 105 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.
1840-களில் சபா மாநிலம், பிரித்தானிய வடக்கு போர்னியோ (North Borneo) என்று அழைக்கப்பட்டது. 1881-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை, 65 ஆண்டுகள், சபா மாநிலத்தை பிரித்தானியப் பேரரசின் முடியாட்சி காலனி என பிரித்தானியர்கள் ஆட்சி செய்தார்கள்.
லபுவான் தீவு என்பது லபுவான் முடியாட்சி காலனி (Crown Colony of Labuan) என்று அழைக்கப்பட்டது. 1848-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை 98 ஆண்டுகள் லபுவான் பிரதேசத்தை பிரித்தானியர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள்.
1888 செப்டம்பர் 17-ஆம் தேதி, புரூணை இராச்சியத்திற்கும் (Kingdom of Brunei) பிரித்தானியப் பேரரசிற்கும் இடையே ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பெயர் பாதுகாப்பு உடன்படிக்கை 1888 (Treaty of Protection 1888).
அந்த உடன்படிக்கைக்குப் பின்னர், 1984-ஆம் ஆண்டு தன்னாட்சி பெறும் வரையில் புரூணை இராச்சியம், ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பில் (Protectorate of the United Kingdom) இருந்து வந்தது.
லபுவான் தீவு என்பது லபுவான் முடியாட்சி காலனி (Crown Colony of Labuan) என்று அழைக்கப்பட்டது. 1848-ஆம் ஆண்டில் இருந்து 1946-ஆம் ஆண்டு வரை 98 ஆண்டுகள் லபுவான் பிரதேசத்தை பிரித்தானியர்கள் ஆட்சி செய்து உள்ளார்கள்.
1888 செப்டம்பர் 17-ஆம் தேதி, புரூணை இராச்சியத்திற்கும் (Kingdom of Brunei) பிரித்தானியப் பேரரசிற்கும் இடையே ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அந்த உடன்படிக்கையின் பெயர் பாதுகாப்பு உடன்படிக்கை 1888 (Treaty of Protection 1888).
அந்த உடன்படிக்கைக்குப் பின்னர், 1984-ஆம் ஆண்டு தன்னாட்சி பெறும் வரையில் புரூணை இராச்சியம், ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பில் (Protectorate of the United Kingdom) இருந்து வந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.