பி. என். முகர்ஜி
இந்திய வரலாற்றாசிரியர், நாணயவியல் அறிஞர், கல்வெட்டுவியலாளர் மற்றும் படிமவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
பிரதீந்திர நாத் முகர்ஜி (Bratindra Nath Mukherjee, 1 சனவரி 1932 - 4 ஏப்ரல் 2013) என்பவர் ஒரு இந்திய வரலாற்றாசிரியர், நாணயவியல் நிபுணர், கல்வெட்டு நிபுணர், படிமவியலாளர் ஆவார். இவர் சோக்டியன் போன்ற மத்திய ஆசிய மொழிகளில் புலமை பெற்றதற்காக அறியப்படுகிறார். [1] இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரத்திற்கான கார்மைக்கேல் இருக்கை பேராசிரியராக இருந்தார். இவர் பல பண்டைய எழுத்துக்களை அறிந்வதவர் என்று கூறப்படுகிறது. [2] இவர் பண்டைய வரலாறு, நாணயவியல், கல்வெட்டுகள் பற்றிய 50 புத்தகங்களையும், 700 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். [1] இந்திய அரசாங்கம் 1992 இல் இவருக்கு குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை வழங்கியது. [3]
விரைவான உண்மைகள் பி. என். முகர்ஜி, பிறப்பு ...
பி. என். முகர்ஜி | |
---|---|
பிறப்பு | 1 சனவரி 1932 வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 4 ஏப்ரல் 2013 ( 81 வயதில்) கொல்கத்தா, இந்தியா |
பணி | வரலாற்றாசிரியர் எழுத்தாளர் நாணயவியலாளர் கல்வெட்டியலாளர் |
பிள்ளைகள் | ஒரு மகன் |
விருதுகள் | பத்மசிறீ எச்.சி. ராய்சௌதுரி நூற்றாண்டு பதக்கம் |
மூடு