பி. டி. பர்னம்
From Wikipedia, the free encyclopedia
பைனியசு டெய்லர் பர்னம் (Phineas Taylor Barnum, சூலை 5, 1810 – ஏப்ரல் 7, 1891) அமெரிக்க காட்சிச்சாலை உரிமையாளரும் அரசியல்வாதியும் வணிகரும் ஆவார். இவர் கொண்டாடப்படும் ஏமாற்றுக் காட்சிகளை ஊக்குவித்ததற்காகவும் பர்னம் & பெய்லி வட்டரங்கை (1871–2017) நிறுவியதற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறார்.[1] எழுத்தாளர், பதிப்பாளர், வள்ளல், அரசியல்வாதி என்ற பன்முகத் திறன் கொண்டிருந்தாலும் அவருடைய கூற்றுப்படி, "நான் தொழில்முறையாக ஒரு காட்சியாளர்...அனைத்துப் பிற முலாம்பூச்சும் என்னை வேறாக்காது"[2]. தனது தனிக் கொள்கை "தன் பேழைகளில் பணத்தை நிரப்புவதுதான்" எனவும் கூறியுள்ளார்.[2] "ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் பர்னமினுடையதாக குறிப்பிடப்படுகின்றது;[3] ஆனால் இதனை அவர்தான் கூறியது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
பி. டி. பர்னம் | |
---|---|
கனெடிகட் மாநிலத்திலுள்ள பிரிட்ஜ்போர்ட் நகரத் தந்தை | |
பதவியில் 1875–1876 | |
Member of the கனெடிகட் House of Representatives from the ஃபெயர்பீல்டு district | |
பதவியில் 1866–1869 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பைனியசு டெய்லர் பர்னம் (1810-07-05)சூலை 5, 1810 பெதல், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | ஏப்ரல் 7, 1891(1891-04-07) (அகவை 80) பிரிட்ஜ்போர்ட், கனெடிகட், ஐக்கிய அமெரிக்கா |
இளைப்பாறுமிடம் | மவுன்டன் கிரேவ் கல்லறைப் பூங்கா, பிரிட்ஜ்போர்ட் |
அரசியல் கட்சி | மக்களாட்சி (1824–1854) குடியரசு (1854–1891) |
துணைவர்(கள்) | சாரிடி ஆலெட் (தி. 1829; இற. 1873) நான்சி ஃபிஷ் (தி. 1874) |
வேலை | வணிகர் (கேளிக்கை) |
அறியபட்டது | பர்னம் & பெய்லி சர்கசு நிறுவனர் 1879இல் கருத்தடை எதிர்ப்புச் சட்டத்தை கனெடிகட் சட்டமன்றத்தில் கொணர்ந்தவர் |
கையெழுத்து | |
நியூயார்க் நகரத்தில் இரண்டு அமெரிக்க அருங்காட்சியகங்களை நிறுவினார்; பிராட்வேயில் ஒன்றும் ஆன் சாலையில் ஒன்றுமாக இருந்தன. 18ஆம் நூற்றாண்டில் நகர மன்றத்தில் வைக்கப்பட்டிருந்த இயற்கை வரலாறு பொருட்களை இந்த அருங்காட்சியகங்களில் வைத்திருந்தார். இங்கு பிஜி மெர்மெய்டு போன்ற சட்டத்திற்குட்பட்ட ஏமாற்றுக் காட்சிகளை நடத்தினார். இங்குதான் மிகக் குள்ளமான ஜெனரல் டாம் தம்பை காட்சிகளில் அறிமுகப்படுத்தினார். ஓபரா பாட்டுக்களைப் பாடி சுவீடிய நைட்டிங்கேல் எனப் பெயரெடுத்த ஜென்னி லின்டும் அமெரிக்காவில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவரே. பர்னமின் இரண்டாவது அருங்காட்சியகம் தீக்கிரையானபோது பர்னம் வட்டரங்கை நிறுவினார். இதில்தான் ஜம்போ எனப் பெயரிட்ட யானையைக் காட்சிப்படுத்தினார்.