பீடைநாசினிகள்
From Wikipedia, the free encyclopedia
பீடைநாசினிகள் என்பது வேளாண்மையில் தாவரங்களுக்கு ஏற்படும் தீங்குகளைக் கட்டுபடுத்தும்,களைகொல்லிகளையும் உள்ளடக்கிய வேதியியல் பொருளாகும்.[1]. மேலும் பீடைநாசினிகள் களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் (பூச்சி வளர்ச்சித் தடைகள், கறையான் கொல்லிகளையும் உள்ளடக்கும்), உருளைப்புழுக் கொல்லிகள், நத்தைக் கொல்லிகள், மீன்கொல்லிகள், பறவைகொல்லிகள்,கொறிணிகொல்லிகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூஞ்சைக் கொல்லிகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்[2][2] இவற்றில் மிகவும் பொதுவானது களைக்கொல்லியாகும். தீங்குயிர்க்கொல்லிகளில் இதுவே அதிக எண்ணிக்கையில் அதாவது 80% வரை பயன்படுத்தப்படுகிறது.[3]
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (மார்ச் 2019) |
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி தீங்குயிர்கொல்லி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பெரும்பாலான பீடைநாசினிகளின் நோக்கம் தாவரங்களுக்கும் அவற்றின் விளை பொருட்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதாகும். பொதுவாக களைகள், பூஞ்சைகள், பூச்சிகள் ஆகியவற்றிடமிருந்து தாவரங்களைப் பாதுகாக்க தீங்குயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றது. பீடைநாசினிகள் பெரும்பாலும் எதிராளிகளை தடுப்பவை அல்லது அவற்றை கொல்பவையாகவோ அல்லது அவற்றின் செயற்பாட்டை நிரோதிப்பவையாகவோ இருக்கலாம் பெரும்பாலும் அவற்றின் இலக்கு அங்கிகள் பூச்சிகள், தாவர நோயாக்கிகள், களைகள், மெல்லுடலிகள், பாலூட்டிகள், மீன்கள், நெமற்றோடாக்கள், நுண்ணங்கிகள் என்பனவாகும்.மேலும் பீடைநாசினிகள் பீடைகளால் உற்பத்தி செய்யப்படும் கூறுகளை அளிப்பவை ஆகும்,மேலும் நோய்க்காவிகளையும் அழிக்கும். இவ்வகை பீடைகள் நோய்களை பரப்புவதுடன் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.பீடைநாசினிகளால் பெரும்பாலான நன்மை ஏற்பட்ட போதிலும் அவற்றினால் சில பாதகமான விளைவுகள் மனிதனுக்கோ அல்லது வேறு வகை விலங்குகளுக்கு ஏற்படலாம்.பீடை நாசினிகளும் அவற்றின் இலக்கு அங்கிகளும் -அல்காகொல்லிகள்அல்காக்களையும்,பறவைகொல்லிகள் பறவைகளையும், பக்றீரியாகொல்லிகள் பக்றீரியாக்களையும், பங்கசுகொல்லிகள் பங்குகளையும்,செடி/தாவர கொல்லிகள் தாவரங்களையும், பூச்சிகொல்லிகள் பூச்சிகளையும், நெமற்றோடுகொல்லிகள் நெமற்றோடுகளையும், கொறிணிகொல்லிகள் கொறிணிகளையும்கொறித்து உண்ணும் விலங்குகள்), வைரசுகொல்லிகள் வைரசுக்களையும் கட்டுப்படுத்தும்.
பீடைநாசினிகள் அவை பயன்படுத்தபடும் இலக்கு அங்கிகளின் அடிப்படையிலும்(உதாரணம்., தாவர/செடிகொல்லிகள் ,பூச்சிகொல்லிகள் மற்றும் பங்கசுகொல்லிகள்) இரசாயன கட்டமைப்பின் அடிப்படையிலும்(உதாரணம்., சேதன,அசேதன,தொகுப்பிற்குரிய அல்லது உயிரியல் முறைக்குரிய(உயிர்ப்பீடைநாசினிகள்),[4] பௌதீக நிலையின் அடிப்படையிலும் வேறுவகைப்படுத்தபடலாம்.உயிர்ப்பீடைநாசினிகள் நுண்ணுயிர்பீடைகொல்லிகள்,உயிர்இரசாயன பீடைநாசினிகள்[5] என இருவகைப்படுத்தப்படும்.
பெரும்பாலான பீடைநாசினிகள் இரசாயன வகையை சார்ந்தவை.இவற்றுள் அடங்கும் முக்கிய பீடைநாசினிகள் வகைகளாவன.
1. சேதனகுளோரின்கள்.
2. சேதனபொஸ்பேற்றுக்கள்.
3. காபமேற்றுக்கள்.
சேதனகுளோரின்கள் ஐதரோகாபன்கள் (உதாரணம்.,DDT)ஆனது டைகுளோரோபீனைல்எதேன் , சைக்ளோடையீன்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஏனைய கூறுகளாகவும் பிரிக்கபடும். இக்கூறுகள் நரம்புநார்களின் சோடியம்/பொட்டாசியம் அயன் சமநிலையை குழப்புவதன் மூலம் நரம்புகணத்தாங்கள் எதிர்எதிர் திசைகளில் தொடர்ச்சியாக கடத்தபடுதலை தூண்டும்.மேலும் இவை நச்சுத்தன்மை கூடிய கூறுகளாகும்.மேலும் இவை உயிர்உருப்பெருக்கம்[6]:239–240 அடையக்கூடியன.சேதனகுளோரின்களுக்கு பதிலாக காபமேற்றுக்களும் சேதனபொஸ்பேற்றுக்களும் பெருமளவு பயன்படும். இவ்விரு கூறுகளும் நரம்புகணத்தாக்கம் ஒருதிசைமட்டுமே கடத்த உதவும் அசைற்றைல்கோலின்எசுத்துரேசு நொதியத்தின் தொழிற்பாட்டை நிரோதிக்கும். சேதனபொஸ்பேற்றுக்கள் முள்ளந்தண்டுளி அங்கிகளுக்கு பெரும் நஞ்சாக அமையும்.இவற்றிற்கு பதிலாக நச்சுத்தன்மை குறைந்த காபமேற்றுக்கள் [6]:136–137பயன்படுத்தபடுகின்றன.