புனித பிலோமினா தேவாலயம், மைசூர்
From Wikipedia, the free encyclopedia
புனித பிலோமினா தேவாலயம் (St. Philomena’s Cathedral) [1] என்பது ஒரு கத்தோலிக்க தேவாலயம் ஆகும். இது இந்தியாவின் மைசூர் மறைமாவட்டத்தின் தேவாலயம் ஆகும். புனித ஜோசப் மற்றும் புனித பிலோமினா தேவாலயம் என்பது இதன் முழுப் பெயராகும். இது புனித செயின்ட் ஜோசப் தேவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. [2] [3] [4] இது 1936ஆம் ஆண்டில் ஒரு நியோ கோதிக் பாணியைப் பயன்படுத்தி கட்டப்பட்டது.மேலும் இதன் கட்டிடக்கலை ஜெர்மனியில் உள்ள கோல்ன் தேவாலயத்தால் ஈர்க்கப்பட்டது. [5] இது ஆசியாவின் மிக உயரமான தேவாலயங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் புனித பிலோமினா தேவாலயம், மைசூர், நாடு ...
புனித பிலோமினா தேவாலயம், மைசூர் | |
---|---|
புனித பிலோமினா தேவாலயம் | |
புனித பிலோமினா தேவாலயம், மைசூர் | |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
மூடு