புலையர்
சாதி / From Wikipedia, the free encyclopedia
புலையர் (Pulayar) (புலையா, புலையாசு, சேரமான், சேரமார் உட்பட) எனப்படுவோர் தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் ஒரு பட்டியல் இன மக்கள் ஆவர்.[1] இவர்கள் கேரளா மற்றும் கருநாடக மாநிலங்களிலும் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர்.[சான்று தேவை] சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமண விழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது.