பெத்சதாக் குளம்
From Wikipedia, the free encyclopedia
பெத்சதாக் குளம் அல்லது பெத்சாயிதாக் குளம் (Pool of Bethesda) எருசலேம் இசுலாமியப் பகுதியில் உள்ள ஒரு குளமாகும். யோவான் நற்செய்தி ஐந்தாம் அதிகாரத்தில் எருசலேமில் ஒரு குளம் பற்றி, ஐந்து தூண்களினால் சூழப்பட்ட ஆட்டு வாயிலுக்கு அருகில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குணமாக்குதலுடன் தொடர்புபட்டது. 19 ஆம் நூற்றாண்டு வரை, குளத்தின் இருப்பு பற்றிய எவ் ஆதாரமும் கிடைக்கவில்லை. அதனால், நற்செய்தி பின்பு எழுதப்பட்டது என்றும் எருசலேம் நகர் பற்றி முதல் அறிவு பெற்றிருந்த ஒருவரிடமிருந்து இன்னுமொருவர் பெற்றிருப்பார் எனவும் வரலாற்று, குறிப்பிடத்தக்கமையைவிட குளம் என்பது உருவகப்படுத்தல் எனவும் அறிஞர்கள் வாதிட்டனர்.[1]
19 ஆம் நூற்றாண்டில், யோவான் நற்செய்தி விபரித்தவாறு ஒரு குளத்தின் எச்சத்தை தொல்லிபொருளியலாளர்கள் கண்டுபிடித்தனர்.[2]