![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Chera_emblem.jpg/640px-Chera_emblem.jpg&w=640&q=50)
பெருஞ்சேரல் இரும்பொறை, தகடூர் எறிந்தவன்
From Wikipedia, the free encyclopedia
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும், அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில் கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Chera_emblem.jpg/320px-Chera_emblem.jpg)
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் 'தகடூர் எறிந்த' என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர், துயில் கலையும் வரை, கவரி வீசினான் இவன், என்று புகழப்படுகிறான்[1]..
கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது[2].
இவனை
- குட்டுவன் இரும்பொறை [3]
- சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [4]
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை [5]
- பூழியர் மெய்ம்மறை [6]
- கொடித்தேர்ப் பொறையன் [7]
- இயல்தேர்ப் பொருநன் [8]
- கோதை மார்பன் [9]
- சேரமான் கோக்கோதை மார்பன் வேறு அரசன்
ஆகிய வேறு பெயர்களிலும் குறிப்பிடுகின்றனர்.