பெலுசியம் சண்டை (கிமு 343)
From Wikipedia, the free encyclopedia
பெலுசியம் சண்டை (Battle of Pelusium) கிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் படையினர்களுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 30-ஆம் வம்ச இறுதிப் பார்வோன் இரண்டாம் நெக்தனெபோ படையினர்களுக்கும் நைல் வடிநிலத்தின் கிழக்கில் அமைந்த பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற போர் ஆகும். [3]இப்போரில் எகிப்திய மற்றும் பாரசீகப் படைகளுடன் கிரேக்கர்களும் இணைந்து சண்டையிட்டனர்.[4]
விரைவான உண்மைகள் பெலுசியம் சண்டை, நாள் ...
பெலுசியம் சண்டை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
|
|||||||||
பிரிவினர் | |||||||||
எகிப்து | பாரசீகப் பேரரசு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
இரண்டாம் நெக்தனெபோ | மூன்றாம் அர்தசெராக்சஸ் | ||||||||
பலம் | |||||||||
80,000 60,000 எகிப்தியர்கள் 20,000 கிரேக்கர்கள்[1] | 144,000 130,000 பாரசீகர்கள் 14,000 கிரேக்கர்கள்[1] [2] |
||||||||
மூடு
போரின் முடிவில் பண்டைய எகிப்து, பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் படைகளால் வெல்லப்பட்டது. இப்போரின் முடிவில் எகிப்தில் எகிப்தியர்களின் ஆட்சி முடிவுற்றது. [5]