மூலவருத்தக் காரருக்கு கற்றாழை தெய்வம் போல. கற்றாழையின் தோலை நீக்கித் துண்டு துண்டாக வெட்டி, மணம் போவதற்கு, ஏழு தண்ணீரில் கழுவி கோப்பையில் போட்டால் மிகவும் அழகாக பளிங்குக் கற்கள் போல் பளபளக்கும். அதை மூலவருத்தக்காரர் காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் சாப்பிட வேண்டும். வாய்க்குள் போட்டால் அப்படியே வழுக்கிக் கொண்டு போகுமாம்.ஆனால் அதன் சுவையில் உண்பவரின் முகம் கோணலாகிப் போகும். சொல்லி வைத்து மூன்று மாதத்தில் வருத்தம் மாறி விடுமாம். மூலவருத்தக்காரர் வந்தால் எனது பூட்டப்பா (பரியாரியார்) இந்தக் கற்றாழையை சுத்தப் படுத்தி இரு கோப்பைகளில் போடுவார். ஒன்று வெறுவயிற்றில் சாப்பிடவாம். மற்றது வீட்டுக்குக் கொண்டு போய் வெங்காயமும் போட்டு நல்லெண்ணெயில் பொரித்து சோற்றுடன் மதியச் சாப்பாடாகச் சாப்பிட வேண்டுமாம்.
மூலவருத்தம் இந்த விதமாகக் கற்றாழையை உண்பதனால் மூன்றே மூன்று மாதத்தில் குணப்படுத்தப் படுவது நான் சின்னவயதிலேயே அறிந்து கொண்ட உண்மை.--Chandravathanaa 14:07, 24 ஏப்ரல் 2010 (UTC)
கூகுள் தமிழாக்கக் கருவியின் மூலம் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, தமிழ் விக்கிப் பயனர்களால் உரை திருத்தப்பட்டு செம்மையாக்கப்பட்டது. Y -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:51, 29 சூலை 2012 (UTC)
கற்றாழை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.