பைல் போர்த்தொடர்
ஏதென்சில் நடந்த உள்நாட்டுப் போர் / From Wikipedia, the free encyclopedia
பைல் போர்த்தொடர் (Phyle Campaign) என்பது பண்டைய ஏதென்சில் நடந்த ஒரு உள்நாட்டுப் போராகும். பெலோபொன்னேசியன் போரில் எசுபார்த்தாவிடம் ஏதென்சு தோல்வியுற்றது. இதையடுத்து ஏதென்சில் இருந்த சனநாயக ஆட்சியை நீக்கி சிலவர் ஆட்சியை எசுபார்த்தா திணித்ததது. அதன் ஒரு விளைவே (பார்க்க முப்பது கொடுங்கோலர்கள் ) இப்போர்களாகும். இப்போர் இறுதியில் ஏதெனியன் சனநாயகத்தை மீட்டெடுப்பதில் முடிந்தது.