போடோ கலாச்சாரம்
From Wikipedia, the free encyclopedia
போடோ கலாச்சாரம் (Boro culture) என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் போடோ பழங்குடியினரின் கலாச்சாரமாகும். நீண்ட காலமாக, போடோக்கள் விவசாயத்தில் ஈடுபடுபவர்களாக இருந்து வருகிறார்கள். [1] மீன்பிடி தொழில், கோழி வளர்ப்பு, பன்றி இறைச்சி, நெல் பயிரிடுதல், சணல் சாகுபடி , பாக்கு மரம் வளர்ப்பது போன்ற வலுவான பாரம்பரியத்துடன் இருந்து வருகிறார்கள். பாரம்பரிய உடைகள் போன்றே அவர்கள் தங்கள் ஆடைகளை புதிதாக உருவாக்குகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், பிரம்ம தர்மத்தின் கீழ் சமீபத்திய சமூக சீர்திருத்தங்களாலும், கிறிஸ்தவத்தின் பரவல் ஆகியவற்றாலும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.