போர்த்துகீசிய திரிபுக் கொள்கை விசாரணை
From Wikipedia, the free encyclopedia
போர்த்துகீசிய கிறித்தவ சமயக் விசாரணை, இதனை அதிகாரப்பூர்வமாக போர்ச்சுகலில் உள்ள விசாரணையின் கத்தோலிக்க திருச்சபையின் பொதுக்குழு என்று அழைக்கப்படுகிறது. இத்திரிபுக் கொள்கை விசாரணை மன்றத்தை போர்த்துக்கல் பேரரசர் மூன்றாம் ஜான் வேண்டுகோளின்படி, கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பாண்டவர் மூன்றாம் பவுல் அனுமதியுடன் 1536 ஆம் ஆண்டில் போர்த்துக்கல் பேரரசில் முறையாக நிறுவப்பட்டது. இக்குற்ற விசாரணை மன்றம் 1536 முதல் 1821 ஆண்டு முடிய செயல்பட்டது. இடைக்கால திரிபுக் கொள்கை விசாரணைக்குப் பிந்தைய காலத்தில் நடைபெற்ற எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணைக்குப் (1478-1834) பின்னர் போர்த்துக்கல் கிறித்தவ சமயக் குற்ற விசாரணை மன்றம் நிறுவப்பட்டது. போர்த்துகீசிய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியினரால் கோவாவில் கத்தோலிக்க கிறித்தவ சமயக் குற்ற விசாரணை நடைபெற்றது. உரோமைச் சமயக் குற்ற விசாரணை மன்றம் 1542 முதல் 1650 முடிய செயல்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையால் போர்த்துகீசிய நாட்டில் நிறுவப்பட்ட சமயக் குற்ற விசாரணை மன்றம் Conselho Geral do Santo Ofício da Inquisição | |
---|---|
![]() திரிபுக் கொள்கை விசாரணை மன்றத்தின் இலச்சினை | |
வகை | |
வகை | போர்த்துகீசியப் பேரரசால் நியமிக்கப்பட்ட குழு |
வரலாறு | |
உருவாக்கம் | 23 மே 1536 |
செயலிழப்பு | 31 மார்ச் 1821 |
உறுப்பினர்கள் | கத்தோலிக்க திருச்சபை மற்றும் போர்த்துகீசியப் பேரரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு |
தேர்தல்கள் | |
இக்குழுவின் தலைவரை போர்த்துக்கல் பேரரசர் நியமனம் செய்கிறார் | |
கூடும் இடம் | |
போர்த்துகல் பேரரசு தலைமையிடம்:லிஸ்பன் | |
அடிக்குறிப்புகள் | |
இதனையும் காண்க: கோவா சமயக் குற்றவிசாரணை எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை உரோமைச் சமயக் குற்ற விசாரணை |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Galileo_before_the_Holy_Office.jpg/320px-Galileo_before_the_Holy_Office.jpg)