மகத நாடு
பண்டைக் கால இந்திய இராச்சியம் / From Wikipedia, the free encyclopedia
மகத நாடு அல்லது மகதம் என்பது ஒரு பகுதி[2] மற்றும் இராண்டாம் நகரமயமாக்கலின் (பொ.ஊ.மு. 600 - பொ.ஊ.மு. 200) 16 மகாஜனபாதங்களில் ஒன்றாகும். இது கிழக்குக் கங்கைச் சமவெளியில் தற்போதைய தெற்கு பீகாரில் (விரிவாக்கத்திற்கு முன்) அமைந்திருந்தது. மகதமானது பிரிகத்ரத அரசமரபு, பிரத்யோதா அரசமரபு (பொ.ஊ.மு. 682–பொ.ஊ.மு. 544), ஹரியங்கா அரசமரபு (பொ.ஊ.மு. 544–பொ.ஊ.மு. 413), சிசுநாக அரசமரபு (பொ.ஊ.மு. 413–பொ.ஊ.மு. 345) மற்றும் மௌரிய அரசமரபால் ஆளப்பட்டது. கிராமகர்கள் என்று அழைக்கப்பட்ட தங்களது உள்ளூர்த் தலைவர்களுக்குக் கீழ் கிராமங்கள் தங்களது சொந்த அவைகளைக் கொண்டிருந்தன. இவற்றின் நிர்வாகமானது செயல், நீதி மற்றும் இராணுவப் பணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[3][4]
மகத இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அண். பொ.ஊ.மு. 1100 – அண். பொ.ஊ.மு. 345 | |||||||||
தலைநகரம் | இராஜகிரகம் பின்னர், பாடலிபுத்திரம் (இன்றைய பட்னா) | ||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம்[1] மாகதிப் பிராகிருதம் அர்த்தமாகதிப் பிராகிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் சைனம் | ||||||||
அரசாங்கம் | அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள படி ஒட்டு மொத்த முடியரசு | ||||||||
சாம்ராட் | |||||||||
• அண். பொ.ஊ.மு. 544 - அண். பொ.ஊ.மு. 492 | பிம்பிசாரன் | ||||||||
• அண். பொ.ஊ.மு. 492 - அண். பொ.ஊ.மு. 460 | அஜாதசத்ரு | ||||||||
• அண். பொ.ஊ.மு. 460 - அண். பொ.ஊ.மு. 444 | உதயணன் | ||||||||
• அண். பொ.ஊ.மு. 437 - அண். பொ.ஊ.மு. 413 | நாகதாசகர் | ||||||||
• அண். பொ.ஊ.மு. 413 - அண். பொ.ஊ.மு. 395 | சிசுநாகன் | ||||||||
• அண். பொ.ஊ.மு. 395 - அண். பொ.ஊ.மு. 367 | காலசோகர் | ||||||||
• அண். பொ.ஊ.மு. 349 - அண். பொ.ஊ.மு. 345 | மகாநந்தி | ||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||
நாணயம் | பணம் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது.[5] இதற்குப் பிறகு வட இந்தியாவின் நான்கு சிறந்த பேரரசுகளான நந்தப் பேரரசு (அண். பொ.ஊ.மு. 345–பொ.ஊ.மு. 322), மௌரியப் பேரரசு (அண். பொ.ஊ.மு. 322–பொ.ஊ.மு. 185), சுங்கப் பேரரசு (அண். பொ.ஊ.மு. 185–பொ.ஊ.மு. 78) மற்றும் குப்தப் பேரரசு (அண். பொ.ஊ. 319–பொ.ஊ. 550) ஆகியவை வந்தன. பாலப் பேரரசும் மகதத்தின் மீது ஆட்சி செய்தது. பாடலிபுத்திரத்தில் ஒரு அரச முகாமைப் பேணி வந்தது.[6][7]
போதி கயாவின் பிதிபதிகள் தங்களைத் தாமே மகதாதிபதி என்று குறிப்பிட்டுக் கொண்டனர். 13ஆம் நூற்றாண்டு வரை மகதத்தின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.[8]
இதன் தலைநகரம் ராஜகிரகம் என்பதாகும். கிழக்கு உத்தரப் பிரதேசம், பிகாரின் பெரும்பகுதி, வங்காளம், மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் ஆகியவற்றில் மகத நாடு பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பௌத்த, சமண நூல்களிலும் மகதம் பற்றிப் பெருமளவு குறிப்புக்கள் உள்ளன. மகதம் பற்றிய மிகப் பழைய குறிப்பு அதர்வண வேதத்தில் காணப்படுகின்றது.