மங்களா நர்ளீகர்
From Wikipedia, the free encyclopedia
மங்களா நர்ளீகர் (Mangala Narlikar; மராத்தி: मंगला नारळीकर) ஓர் இந்தியப் பெண் கணிதவியலாளர். இவர் உயர்கணிதவியலிலும் அடிப்படை எண்ணியலிலும் ஆய்வு செய்தவரும் பயிற்றுவித்தவரும் ஆவார். இவர் கணிதவியலில் இளவல், முதுவர் பட்டங்கள் பெற்ற பின்னர் மும்பை டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு ப்பூனாவில் உள்ள மும்பை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார் .[1] இவர் ஆங்கிலத்திலும் மராத்தியிலும் பல கணிதவியல் நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் 2002 இல் விசுவநாத் பார்வதி கோகலே விருதைக் கார்கி அஜூன் ஜீவந்த் ஆகே (गार्गी अजून जिवंत आहे) எனும் மராத்தி நூலுக்குப் பெற்றுள்ளார்.[2]
விரைவான உண்மைகள் மங்களா நர்ளீகர், பிறப்பு ...
மங்களா நர்ளீகர் | |
---|---|
பிறப்பு | மங்களா இராஜ்வாதே மும்பை, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம், |
பணி | கணிதவியலாளர் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | ஜயந்த் நர்ளீகர் |
பிள்ளைகள் | மூன்று மகள்கள் |
மூடு