மஞ்சுசிறீ
From Wikipedia, the free encyclopedia
மஞ்சுசிறீ ( Manjushri ), அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர் ஆவார். சாக்கியமுனி புத்தரின் சீடரான இவர், அறிவு, அறிவுக்கூர்மை மற்றும் மனத்தெளிவு முதலியவற்றின் வெளிப்பாடாக உள்ளார். அவலோகிதருக்கு அடுத்து மிகவும் புகழ் பெற்ற போதிசத்துவர் மஞ்சுசிரீ ஆவார். இவருடையாக இணையாக சரசுவதி கருதப்படுகிறார்.
சப்பானில் மஞ்சுசிரீ, சாக்கியமுனி மற்றும் சமந்தபத்திரர் சான்சோன் சாகா என்ற மும்மூர்த்தியாக உள்ளனர். மஞ்சுசிரீ, எட்டு அறிவாற்றலின் (பிரக்ஞை) போதிசத்துவர்களுள் ஒருவர் ஆவார். மேலும் சப்பானில் வணங்கப்படும் 13 புத்தர்களுள் ஒருவர். திபெத்திய பௌத்தத்தில் இவர், அவலோகிதர் மற்றும் வச்சிரபாணியுடன் மும்மூர்த்தியாக சித்தரிக்கப்படுகிறார்.
மஞ்சுசிரீ பல மகாயான சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார். அவற்றில் முக்கியமனது பிரக்ஞாபாரமித சூத்திரம். தாமரை சூத்திரத்தின் படி இவருடைய உலகம் 'விமலம்' என்று அழைக்கப்படுகிறது. அவதாம்சக சூத்திரத்தின் படி இவ்வுலகம் கிழக்கு திசையில் அமைந்துள்ளது. இவரை மஞ்சுகோசர் எனவும் அழைப்பர்
இவர் திபெத்திய பௌத்தத்தில் யிதம் ஆக கருதப்படுகிறார். இவர் ஒரு பரிபூர்ண புத்தராகவும் கருதப்படுகிறார்