மணல் அச்சில் வார்த்தல்
From Wikipedia, the free encyclopedia
மணலில் வார்த்தல் அல்லது மணல் அச்சில் வார்த்தல் என்பது மணலினால் உருவாக்கப்பட்ட அச்சில் உலோகங்களை உருக்கி வார்ப்பதன் மூலம் பொருட்களை உருவாக்கும் செயல்முறையாகும். 70% இற்கும் அதிகமான உலோக வார்த்தல்கள், மணல் வார்த்தல் செயல்முறையினாலேயே உருவாக்கப்படுகின்றன. மணலில் வார்த்தல் ஒப்பிட்டளவில் மலிவானதும் உருக்கினை வார்த்தல் போன்ற கடும் வெப்ப வேலையில் பயன்படுத்தக்கூடிய முறையுமாகும். அச்சு உருவாக்கப் பயன்படும் மணலுடன் ஒட்டும் பொருட்கள் (பொதுவாக களி போன்றவை) கலக்கப்படுகின்றன, இக்கலவை வழக்கமாக நீரினாலோ அல்லது பிற பொருட்களினாலோ ஈரப்படுத்தப்படுகிறது, அச்சிற்குத் தேவையான வலிமையையும் நெகிழ்தன்மையையும் பெற மற்றையப் பொருட்களும் கலக்கப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |