![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Marco_Polo_-_costume_tartare.jpg/640px-Marco_Polo_-_costume_tartare.jpg&w=640&q=50)
மார்க்கோ போலோ
From Wikipedia, the free encyclopedia
மார்க்கோ போலோ (Marco Polo) [1] என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8–9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார்[2][3][4][5][6]. இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும், பிற ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒரு இத்தாலிய வணிகரான இவர்.[5][6] மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.
மார்க்கோ போலோ Marco Polo | |
---|---|
![]() மார்க்கோ போலோவின் உருவப்படம் (16ம் நூற்றாண்டு ஓவியம்) | |
பிறப்பு | ஏறத்தாழ 1254 வெனிசு |
இறப்பு | சனவரி 8, 1324(1324-01-08) (அகவை 69) வெனிசு, வெனிசியக் குடியரசு |
கல்லறை | சான் லொரென்சோ தேவாலயம், வெனிசு 45.2613°N 12.2043°E / 45.2613; 12.2043 |
பணி | வணிகர், நாடுகாண் பயணி |
அறியப்படுவது | மார்க்கோ போலோவின் பயணங்கள் |
பெற்றோர் | தந்தை: நிக்கொலோ போலோ |
வாழ்க்கைத் துணை | டாண்டா படோவர் |
தந்தை, மாமா நிக்கோலோ மற்றும் மாஃபியோ ஆகியோரிடமிருந்து போலோ வர்த்தக வியாபாரத்தை கற்றுக்கொண்டார். இவர்கள் ஆசியா வழியாகப் பயணம் மேற்கொண்டு குப்ளாய்கானை சந்தித்தனர். 1269 ஆம் ஆண்டில் அவர்கள் வெனிசுக்குத் திரும்பி வந்து முதன்முறையாக மார்கோபோலோவைச் சந்தித்தனர். ஆசிய சாதனைப் பயணத்திற்காக கப்பல் ஏறிய இவர்கள் 24 ஆண்டுகள் கழித்து வெனிசு திரும்பியபோது அந்நகரம் கெனோவாவுடன் போருக்கு ஆளாகியிருந்தது. சிறையில் அடைபட்டிருந்த மார்கோபோலோ சிறைத்தோழரிடம் தன்னுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருப்பார். 1299 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர் மிகப்பெரிய வியாபாரியாக வளர்ச்சி கண்டார். திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். 1324 இல் மரணமடைந்த போலோ வெனிசு நகரிலுள்ள சான் லொரென்சோ பேராலயத்தில் புதைக்கப்பட்டார்.