மார்த்தா
From Wikipedia, the free encyclopedia
புனித மார்த்தா (Martha of Bethany) (அரமேயம்: מַרְתָּא - Martâ) என்பவர் புதிய ஏற்பாட்டு நூல்களாகிய லூக்கா நற்செய்தியிலும் யோவான் நற்செய்தியிலும் விவரிக்கப்படுகின்ற ஒருவர் ஆவார்.
விரைவான உண்மைகள் புனித மார்த்தாSaint Martha, கன்னியர்; வெள்ளைப்போளம் கொணர்பவர்; தெற்கு கால் நாட்டு புதுமைபுரிபவர் ...
புனித மார்த்தா Saint Martha | |
---|---|
மேரி மற்றும் மார்த்தா வீட்டில் இயேசு. (இடது:மார்த்தா; இயேசுவின் அருகே மரியா). ஓவியர்: ஹேரல்ட் கோப்பிங். | |
கன்னியர்; வெள்ளைப்போளம் கொணர்பவர்; தெற்கு கால் நாட்டு புதுமைபுரிபவர் | |
பிறப்பு | யூதேயா எனத் தெரிகிறது. இன்றைய இசுரயேல் - மேற்குக் கரை |
இறப்பு | மரபுப்படி சைப்ரசு நாட்டு லார்னாக்கா. அல்லது பிரான்சு நாட்டு தாராஸ்கோன் |
ஏற்கும் சபை/சமயங்கள் | உரோமன் கத்தோலிக்கம், கீழைக் கிறித்தவம், ஆங்கிலிக்கம், லூதரனியம் |
புனிதர் பட்டம் | வழிமுறைகளுக்கு முற்பட்ட காலம் |
திருவிழா | சூலை 29 (உரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம், லூதரனியம்); சூன் 4 (மரபுவழி சபை) |
சித்தரிக்கப்படும் வகை | விளக்குமாறு; தாழ்ப்பாள்கள்; அகப்பை[1] |
பாதுகாவல் | உதவியாளர்; சமையல் செய்வோர்; உணவுநெறியாளர்; வீட்டுவேலை செய்வோர்; வீட்டுப் பொறுப்பாளர்; விடுதியாளர்; வீட்டில் கூலிவேலை செய்வோர்; இல்லத்தலைவியர்; விடுதிக்காப்பாளர்; சலவைத் தொழிலாளர்; வேலைக்காரர்; தனித்த பெண்கள்; பயணம் செய்வோர்; எசுப்பானியாவின் வில்லாகோயோசா[1] |
மூடு
மார்த்தாவும் அவருடைய உடன்பிறப்புகளான இலாசர் மற்றும் மரியா ஆகியோர் எருசலேம் அருகே பெத்தானியா என்னும் ஊரில் வாழ்ந்துவந்ததாக புதிய ஏற்பாடு தகவல் தருகின்றது. குடும்பத்தில் மரியா முதலிலும், அவருக்கு அடுத்தவராக இலாசரும், இருவருக்கும் இளையவராக மரியாவும் இருந்தனர். இறந்துபோன இலாசருக்கு இயேசு உயிர்கொடுத்த நிகழ்ச்சியைக் கண்டவருள் மார்த்தாவும் ஒருவர்.