முயலகன்
From Wikipedia, the free encyclopedia
முயலகன் எனும் உருவம் தட்சிணாமூர்த்தி மற்றும் நடராசர் போன்ற சிவத் தோற்றங்களில், சிவபெருமானின் காலடியில் அமைந்திருக்கும். முயலகனை அறியாமை மற்றும் ஆணவத்தைக் குறிப்பதால், அறிவுப் பிழம்பாகிய சிவபெருமான், அறியாமை மற்றும் ஆணவத்தின் வடிவமான முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பாகும். [1]