![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Murasaki-Shikibu-composing-Genji-Monogatari.png/640px-Murasaki-Shikibu-composing-Genji-Monogatari.png&w=640&q=50)
முரசாக்கி சிக்கிபு
From Wikipedia, the free encyclopedia
முரசாக்கி சிக்கிபு (紫|紫式|式部|部; (சுமார் 973- சுமார் 1014 அல்லது 1025) (ஆங்கிலத்தில் சீமாட்டி முரசாக்கி), ஜப்பான் நாட்டில் ஹையன் காலகட்டத்தில் அரசவையில் பணிபுரிந்த பெண் நாவலாசிரியரும் புலவருமாவார். அவர் கி.பி 1000 வாக்கில் எழுதிய "ஜெஞ்சியின் கதை" என்ற புதினத்தால் புகழ்பெற்றவர். இது ஜப்பானின் ஆரம்ப கால புதினங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
விரைவான உண்மைகள் முரசாக்கி சிக்கிபு, பிறப்பு ...
முரசாக்கி சிக்கிபு | |
---|---|
![]() முரசாக்கி சிக்கிபு, வரைந்தது டோசா மிட்சுவோகி (17ஆம் நூற்றாண்டு) | |
பிறப்பு | சுமார் 973 கியோட்டோ |
இறப்பு | சுமார் 1014 கியோட்டோ |
புனைபெயர் | முரசாக்கி சிக்கிபு |
தொழில் | ஹையன் காலகட்டத்தில் அரசவை சீமாட்டி |
தேசியம் | யப்பான் |
காலம் | ஹையன் காலகட்டம் |
வகை | புதினம், கவிதை |
குடும்பத்தினர் | ஃபுஜிவாரா நோ டமெடோகி (தந்தை) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Murasaki_Shikibu.jpg/640px-Murasaki_Shikibu.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/KyotoRozanji.jpg/320px-KyotoRozanji.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e6/2000_Yen_Murasaki_Shikibu.jpg/640px-2000_Yen_Murasaki_Shikibu.jpg)
முரசாக்கி சிக்கிபு அவரது இயற்பெயரன்று. அவரது உண்மையான பெயர் எதுவென பல ஊகங்கள் நிலவுகின்றன.[1] அவரது நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரே அவருக்கு முரசாக்கி என செல்லப் பெயராயிற்று. சிக்கிபு என்பது அவரது தந்தையின் பதவி குறித்து வந்ததாகும்.