மூ
From Wikipedia, the free encyclopedia
மூ என்பது கடலில் மூழ்கிவிட்டதாக கூறப்படும் ஒரு தொன்பியல் கண்டமாகும். இந்த தொன்பியல் கண்டம் பற்றிய கோட்பாடுகள் முதலில் அகசுடசு லே ப்லொஙியொன் என்ற தொன்பியல் நாகரிக ஆய்வாளரால் கூறப்பட்ட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய மூ கண்ட அழிவிலிருந்து மீண்டவர்களே எகிப்து மற்றும் அமேரிக்க நாகரிகங்களை ஆரம்பித்தனர் என்ற கருத்தை மூலமாக கொண்டு[2] அவரை பின்பற்றிய சேம்சு சர்ச்வேர்ட் என்றவரால் பிரபலப்படுத்தப்பட்டது.[3]
குமரிக்கண்டம் போன்றே இவ்வளவு பெரிய நிலப்பரப்பு சில வருடங்களில் ஒரேடியாக கடலில் மூழ்கிவிட்டதை ஆய்வாளர்கள் நம்ப மறுக்கின்றனர்.[4][5] அதனால் தற்போதைய ஆய்வாளர்கள் இதை ஒரு புனைவிடம் என்றே கூறிவருகின்றனர்.[6][7]