![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d6/Achaemenid_nobleman_520-480_BCE.jpg/640px-Achaemenid_nobleman_520-480_BCE.jpg&w=640&q=50)
மெகாபிசஸ்
பாரசீக தளபதி / From Wikipedia, the free encyclopedia
மெகாபிசஸ் (Megabyzus, பண்டைக் கிரேக்கம்: Μεγάβυζος ) என்பவர் ஒரு அகாமனிசிய பாரசீகத் தளபதி ஆவார். இவர் சோபிரசின் மகனும், பாபிலோனியாவின் சட்ராப் மற்றும் முதலாம் டேரியசை அரியணையில் அமர்த்திய ஏழு சூழ்ச்சிக்காரர்களில் ஒருவரான முதலாம் மெகாபிசசின் பேரன் ஆவார். கிமு 482 இல் சத்ரபி கிளர்ச்சி செய்தபோது இவரது தந்தை கொல்லப்பட்டார், மேலும் நகரத்தை மீண்டும் கைப்பற்றிய படைகளுக்கு மெகாபிசஸ் தலைமை தாங்கினார். அதன் பிறகு எதிர்கால கிளர்ச்சிகளைத் தடுக்க மர்துக் கடவுளின் சிலை அழிக்கப்பட்டது. மெகாபிசஸ் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பில் (கிமு 480-479) கலந்துகொண்டார். தெல்பியைக் கொள்ளையடிக்க தொடுக்கபட்ட உத்தரவின் பேரில் செயல்பட மறுத்ததாக எரோடோட்டசு கூறுகிறார். ஆனால் அத்தகைய உத்தரவுகள் எப்போதாவது கொடுக்கப்பட்டதா என்பது சந்தேகமே.
விரைவான உண்மைகள் மெகாபிசஸ், சார்பு ...
மெகாபிசஸ் | |
---|---|
![]() அகாமனிசியப் பிரபு, கிமு 520-480. | |
சார்பு | அகாமனிசியப் பேரரசு |
சேவைக்காலம் | fl. c.485 – 440 BCE |
தரம் | சிரியாவின் ஆளுநர் |
போர்கள்/யுத்தங்கள் | எகிப்திய போர்த் தொடர்கள் |
துணை(கள்) | Amytis |
பிள்ளைகள் | Zopyrus II |
மூடு