மெய்போமியன் சுரப்பி
From Wikipedia, the free encyclopedia
மெய்போமியச் சுரப்பிகள் (Meibomian glands) ( அல்லது இமையோரச் சுரப்பிகள், இமையோரப்படலச் சுரப்பிகள்) என்பவை இமையோரத் தட்டின் கண்ணிமை விளிம்புகளில் அமைந்த மெழுகு போன்ற எண்ணெய்ச் சுரப்பிகளாகும். இவை கண்ணிமைகளின் விளிம்பில் கண்ணீர் சுரப்பதற்குக் காரணமாக அமைகின்றன.மெய்பம் எனும் சுரப்புப் பொருள் கன்னத்தில் கண்ணீரைச் சிதறச்செய்வதை தடுக்கவும்,மேலும் கண்விழி, எண்ணெய் விளிம்பில் கண்ணீர் செல்வதைத் தடுக்கவும் உதவுகிறது. இவ்வகை சார்ந்த ஏறத்தாழ 25 சுரப்பிகள் மேல் கண்ணிமைகளில் உள்ளன.
கண்ணிமை சுரப்பி Meibomian gland | |
---|---|
இடது கண் முகப்பு. நடு கடைக்கண்ணையும் இமையோர மெய்போமியச் சுரப்பியையும் காட்ட கண்னிமைகள் விலக்கி காட்டப்பட்டுள்ளன. | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | glandulae tarsales |
MeSH | D008537 |
TA98 | A15.2.07.042 |
TA2 | 6833 |
FMA | 71872 |
உடற்கூற்றியல் |
இயல்பற்ற கண்ணிமைச் சுரப்பிகளால் பெரும்பாலும் உலர்கண்கள் ஏற்படுகின்றன, இது மிகவும் பொதுவான கண்நிலைமைகளில் ஒன்றாகும். இது கண்ணிமை அழற்சியையும் ஏற்படுத்துகிறது.
ஒரு செருமானிய மருத்துவராகிய என்றிக் மெய்போம் (1638-1700) என்பவரின் பெயரிலிருந்து இவை மெய்போமியச் சுரப்பிகள் எனப் பெயரிடப்பட்டுள்ளன.