![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8f/Ram_Narayan_2009_crop.jpg/640px-Ram_Narayan_2009_crop.jpg&w=640&q=50)
ராம் நாராயண்
சாரங்கி வாசிப்பவர் / From Wikipedia, the free encyclopedia
ராம் நாராயண் (இந்தி: राम नारायण) (பிறப்பு 25 திசம்பர் 1927), பண்டிட் ராம் நாராயண் என அறியப்படுபவர், சாரங்கி இசைக்கருவியில் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞராவார். சாரங்கியை பக்கவாத்தியமாக கருதிவந்த இசைப்பிரியர்களிடம் அதற்கான முதன்மை நிலையை நாட்டியதில் இவரது பங்கு சிறப்பானது ஆகும். புகழ்பெற்ற தபலா இசைக்கருவி கலைஞர் பண்டிட் சதுர்லாலின் தமையனாவார்.
விரைவான உண்மைகள் ராம் நாராயண், பின்னணித் தகவல்கள் ...
ராம் நாராயண் | |
---|---|
![]() 2009 கச்சேரி ஒன்றில் வாசிக்கையில் | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 25 திசம்பர் 1927 (1927-12-25) (அகவை 96) உதய்பூர், மேவார், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
இசைக்கருவி(கள்) | சாரங்கி |
இசைத்துறையில் | 1944–நடப்பு |
இணைந்த செயற்பாடுகள் | அப்துல் வாகீத் கான், சதுர் லால், பிரிஜ் நாராயண் |
இணையதளம் | பண்டிட் ராம் நாராயண் |
மூடு
அவரது சீரிய இசையைப் பாராட்டுமுகமாக 2005ஆம் ஆண்டு நாட்டின் இரண்டாவது உயரிய குடிமை விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது.