வடக்கு சத்திரபதிகள்
From Wikipedia, the free encyclopedia
வடக்கு சத்ரபதிகள் அல்லது மதுராவின் சத்திரபதிகள் (Northern Satraps , or Satraps of Mathura)[1] இந்தோ=சிதியர்கள் வட இந்தியாவை ஆண்ட இந்தோ கிரேக்கர்களையும் மற்றும் மதுராவின் உள்ளூர் மன்னர்களையும் வீழ்த்தி, கிழக்கு பஞ்சாப் முதல் மதுரா வரை கிமு 60 முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட வடக்கு சத்திரபதிகள் ஆவார். வடக்கு சத்திரபதிகள் சகலா மற்றும் மதுரா நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
வடக்கு சத்திரபதிகள் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 60–கிபி 2ஆம் நூற்றாண்டு | |||||||||||
தலைநகரம் | சகலா/மதுரா | ||||||||||
சமயம் | பௌத்தம் இந்து சமயம் சமணம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பண்டைய வரலாறு | ||||||||||
• தொடக்கம் | கிமு 60 | ||||||||||
• முடிவு | கிபி 2ஆம் நூற்றாண்டு | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா பாக்கித்தான் |
மேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட மேற்கு சத்திரபதிகளும், வடக்கு சத்திரபதிகளும் சமகாலத்தவர்களே. வடக்கு சத்திரபதிகள் பௌத்தம், சமண மற்றும் இந்து சமயங்களையும் ஆதரித்ததுடன், பல நினைவுச் சின்னங்களை எழுப்பியும், தங்களது உருவம் பொறித்த நாணயங்களைய்ம் வெளியிட்டனர்.
பின்னர் மதுராவை தலைநகராகக் கொண்டு ஆண்ட குசானப் பேரரசர் வீம கட்பீசஸ் மற்றும் கனிஷ்கர் ஆட்சிக்காலத்தில், வடக்கு சத்திரபதிகள் வெல்லப்பட்டு, குசானப் பேரரசில் சத்திரபதிகள் எனும் மாகாண ஆளுநர்களாக பணிபுரிந்தனர். எனவே வரலாற்று ஆசிரியர்கள், வட இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதியர்களுக்கு வடக்கு சத்திரபதிகள் எனப்பெயரிட்டனர்.