வழும்பலைவிலங்கு
From Wikipedia, the free encyclopedia
வழும்பலைவிலங்கு (Gelatinous zooplankton) என்பது நீரில் வாழக்கூடிய வழவழப்பு நிறைந்த உடற்பகுதியைக் கொண்ட உயிரின வகையாகும். இதில் பல குழுக்களைச் சேர்ந்த உயிரிகள் காணப்படுகின்றன. இந்த வகை உயிரினங்களின் பெரும் பிரிவே இதன் உடலில் அமையப் பெற்ற நீரால்தான். பிற உயிரினங்களை ஒப்பிடுகையில் இதன் உடல் மிகுதியான நீரினால் ஆனது. இவ்வகையினுள் உயிரினத் தொகுதியில் காணப்படும் பெருந் தொகுதியில் இடம்பெற்ற உயிர்களும் அதே நேரத்தில் பல வகையான சிறுந் தொகுதியில் இடம்பெற்ற உயிரினங்களும் இடம் பெற்றுள்ளன. இதன் உயிரினப் பட்டியல் காலத்தால் முந்தைய ப்ரோடிசுடுகள் முதல் கார்டேட்டுகள் (தண்டுவடமுள்ள உயிரினங்கள்) வரை இடம் பெற்றுள்ளன.
இப்பிரிவு மென்மையான சதைகளாலான உடலமைப்பைக் கொண்ட நீர்வாழ் விலங்குகளைக் குறிக்கும். இதன் உடலில் இழுவைத் தன்மையும் குழகுழப்புத் தன்மையும் மிகுந்துக் காணப்படும். உடலின் உறுதியற்ற நிலையினால் இவைகளின் உடல்கள் எளிதில் சிதையக்கூடியதாகவும் சேதமடையக்கூடியதாகவும் இருக்கிறது[1]. இதில் அறியப்படும் மெய்யாதெனில் இவ்வொன்றோடுன்று வேறுபட்டிருக்கும் உயிரிகளில் தனித்தனிலையில் அதன் ஒத்த உடற்தோற்றம் அமையப்பெற்றிருப்பது ஒரு வியத்தகு நிகழ்வாகும். இவை நமக்கு வழும்பலை விலங்குகள் திறந்த கடற்பரப்பில் வாழும் உயிரிகளான இவை இயற்கையாக எவ்வாறு உடலமைப்பை பெற்றிருத்தல் வேண்டும் என்கிறது.