வில்லியம் ஆர்வி
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் ஆர்வி (William Harvey; வில்லியம் ஹார்வி, ஏப்ரல் 1, 1578 - சூன் 3 1657) என்பவர் ஆங்கிலேய மருத்துவ ஆராய்ச்சியாளர். உடற்கூற்றியல், உடலியங்கியல் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பை வழங்கியவர். குருதி இதயத்திலிருந்து தொடங்கி மனித மூளை உட்பட உடலின் பல பகுதிகளுக்கும் சென்று திரும்பவும் தொடங்கிய இடமான இதயத்திற்கே வந்து சேருகிறது என்ற குருதிச் ஓட்டம் பற்றிய புதிய தகவலை தம் ஆராய்ச்சியின் மூலம் முதன் முதலாக வெளியிட்டார்.[1][2] இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் மேலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட உதவியாக இருந்தது என்று மருத்துவ உலகில் கருதப்படுகிறது.
வில்லியம் ஹார்வி William Harvey | |
---|---|
பிறப்பு | 1 ஏப்ரல் 1578 போக்சுடோன், இங்கிலாந்து |
இறப்பு | 3 சூன் 1657(1657-06-03) (அகவை 79) ரேகாம்ப்டன், இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | ஆங்கிலேயர் |
துறை | மருத்துவம் உடற்கூற்றியல் |
கல்வி கற்ற இடங்கள் | கொன்வில், கேயசு கல்லூரி, கேம்பிரிட்சு பதுவா பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஐயரோனிமசு பாப்ரிசியசு |
அறியப்படுவது | De Motu Cordis (குருதிச் சுற்றோட்டம்) |
கையொப்பம் |
இங்கிலாந்தில் 1578 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தமது பதினைந்தாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்பு இத்தாலியிலுள்ள பாதுவா பல்கலைக்கழகத்திற்குச் சென்று பயின்றார். அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும் ஆனார். வில்லியம் ஹார்வி முதலாம் சார்லஸ் மன்னரின் அபிமானத்துக்குரிய மருத்துவராக பணியாற்றினார்.