வைணு பாப்பு வானாய்வகம்
ஏலகிரிக்கு அருகே / From Wikipedia, the free encyclopedia
வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது. இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும். இந்தியாவின் பெரிய வானியல் தொலைநோக்கிகளில் ஒன்று இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது. இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது. இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது[1].
விரைவான உண்மைகள் நிறுவனம், அமைவிடம் ...
நிறுவனம் | இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் |
---|---|
அமைவிடம் | காவலூர், திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
அச்சுத்தூரங்கள் | 12°34′0″N 78°50′0″E |
கடல்மட்ட உயரம் | 700 m (2,297 ft) |
குத்துயரம் | 700 m (2,297 ft) |
வலைப்பக்கம் | பரணிடப்பட்டது 2005-09-05 at the வந்தவழி இயந்திரம் |
வைணு பாப்பு தொலைநோக்கி | 2.34 மீட்டர் எதிரொளிப்பான் |
தொலைநோக்கிகள் | |
காரல் சீயஸ் ஏஜி தொலைநோக்கி | 1 மீட்டர் எதிரொளிப்பான் |
கேசகிரேன் தொலைநோக்கி | 75 செ.மீ எதிரொளிப்பான் |
சிமிட் தொலைநோக்கி | 45 செ.மீ தொலைநோக்கி |
ஒளி அளவியல் தொலைநோக்கி | 34 செ.மீ எதிரொளிப்பான் |
பிற கருவிகள் | |
எஃப் பீ ஐ | பேப்ரி-பெராட் குறுக்கீட்டுமானி |
மூடு