ஹர்ஷவர்தனர்
From Wikipedia, the free encyclopedia
ஹர்ஷர் அல்லது ஹர்சவர்தனர் (हर्षवर्धन) (590–647) வட இந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு இந்தியப் பேரரசர். இவருடைய தந்தை பிராபாகரவர்தனர். இவருடைய அண்ணன் ராஜ்யவர்தனர் தானேஸ்வரத்தின் அரசர். இவர் தன் ஆட்சியின் உச்சத்தில் பஞ்சாப், வங்காளம், ஒரிசா, சிந்து கங்கைச் சமவெளி முழுவதையும் ஆண்டு வந்தார். தெற்கே நர்மதை நதி வரை இவருடைய ஆட்சி இருந்தது.[1][2]
விரைவான உண்மைகள் ஹர்ஷவர்தனர், பேரரசர் ஹர்சவர்தனர் ...
ஹர்ஷவர்தனர் | |
---|---|
பேரரசர் ஹர்சவர்தனர் | |
ஆட்சிக்காலம் | கி பி 606 - 647 |
முன்னையவர் | இராச்சிய வர்தனர் |
பிறப்பு | 590 |
இறப்பு | 647 |
அரசமரபு | புஷ்யபூதி |
தந்தை | பிரபாகர வர்தனர் |
மூடு
கி பி ஆறாம் ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியா முழுதும் குப்த பேரரசு வீழ்ச்சிக்குப்பின் சிறு சிறு குடியாட்சிகளாகவும் குறுநில மன்னராட்சிகளாகவும் இருந்து வந்தது. இந்தக் குறுநில மன்னர்கள் கி.பி 606 ஹர்ஷரை அவருடைய 16ஆவது வயதில் அரசராக முடிசூட்டினர்..[3] ஹர்ஷர் தனது பேரரசை மேற்கில் பஞ்சாப் முதல் கிழக்கில் வங்காளம் வரை விரிவு படுத்தினார்.