1725 வரை ஆங்கிலத் துடுப்பாட்டத்தின் வரலாறு
From Wikipedia, the free encyclopedia
1725 வரையிலான துடுப்பாட்டத்தின் வரலாறானது, இது தோன்றியதாக கருதப்படும் காலந்தொட்டு, இங்கிலாந்தில் இது ஒரு பெரும் விளையாட்டாக வளர்ந்து மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் வரையில் ஏற்பட்ட விளையாட்டின் வளர்ச்சியை சித்தரிக்கிறது.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கிரிக்கெட்டு பற்றிய திட்டவட்டமான குறிப்பு முதன்முதலில் 1598ம் ஆண்டில் காணப்படுகிறது. அதில் இந்த விளையாட்டு சுமார் 1550களில் விளையாடப்பட்டதென்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது தோன்றிய பிறப்பிடம் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இதன் துவக்கம் 1550ம் ஆண்டிற்கு முன்புள்ளது. மேலும் இது கெண்ட்டு, சசெக்சு மற்றும் சர்ரே ஆகிய மாவட்டங்களுக்குள் தென்கிழக்கு இங்கிலாந்தில், பெரும்பாலும் த வெல்ட் என்ற ஒரு பிராந்தியத்தில் தோன்றியிருக்க வேண்டும். இவையே இந்த விளையாட்டைக் குறித்து ஓரளவிற்கு திட்டவட்டமாக கூறமுடிகிறது. மட்டைவீரர்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் பந்துக்காப்பாளர்கள் அடங்கிய இசுடூல்பால் மற்றும் ரௌண்டர்சு போன்ற ஆட்டங்களையல்லாமல், துடுப்பாட்டம் குறும்புல் தரையில் மட்டுமே விளையாடக் கூடியதாகும். ஏனெனில் 1760கள் வரை பந்து தரைமட்டமாகவே கிரிக்கெட்டில் வீசப்பட்டது. எனவே காட்டு கழிச்சல்களும் மேய்ச்சல் வெளிகளும் விளையாட ஏற்ற இடங்களாக இருந்திருக்கக் கூடும்.
துடுப்பாட்டத்தின் ஆரம்ப காலங்கள் பற்றி கிடைக்கப் பெற்ற குறைந்த தகவலானது, இது முதலில் குழந்தைகள் விளையாட்டாகவே இருந்ததென்பதை சுட்டிக் காட்டுகிறது. பிறகு, 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது தொழிலாளர்களால் கையெடுக்கப்பட்டது. சார்லசு I ஆட்சிக் காலத்தில் உயர்குடி மக்கள் முதலில் புரவலர்களாக அதிகரிக்க ஆர்வம் காண்பித்தனர். பின்பு அவ்வபோது விளையாடவும் தொடங்கினர். இந்த விளையாட்டில் சூதாடக் கூடியத் தன்மை அவர்களை இதன்பால் மிகவும் ஈர்த்தது. மேலும் மறுசீரமைப்பிற்குப் (ரெசுடொரேசன்) பின் இது வெகுவாக அதிகரித்தது. கனூவர் மரபுத்தொடர்வின் (கனூவேரியன் சக்சசன்) போது, துடுப்பாட்டத்தில் முதலீடு ஏற்பட்டதால் தொழில்சார் விளையாட்டு வீரர்களையும் முதல் பெரும் குழுக்களையும் உண்டாகின. இவ்வாறு லண்டனிலும் இங்கிலாந்தின் தென்பகுதியிலும் துடுப்பாட்ட விளையாட்டு ஒரு மக்களுக்கான சமூக நிகழ்வாக நிறுவப்பட்டது. இதனிடையே ஆங்கிலேய குடியேற்றக்காரர்கள் துடுப்பாட்டத்தை வட அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அறிமுகம் செய்திருந்தனர்; மேலும் கடலோடிகளும் கிழக்கிந்திய நிறுவன வணிகர்களும் இதை இந்திய துணைக்கண்டத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.