1997 இந்தோனேசிய காட்டுத்தீ நிகழ்வுகள்
From Wikipedia, the free encyclopedia
1997 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ நிகழ்வுகள் என்பது 1997 ஆம் ஆண்டு தொடங்கி 1998 ஆம் ஆண்டு வரை நீடித்த காட்டுத்தீ நிகழ்வுகளைக் குறிக்கும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உள்ள வரலாற்றுப் பதிவுகளின் படி பெரிய காட்டுத்தீ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
1997 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ அண்டை நாடுகளை பாதிக்கத் தொடங்கியது, மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு தடிமனான புகை மற்றும் மூடுபனி பரவியது. பின்னர் மலேசிய பிரதமர் மகாதீர் பின் மொஹமட் ஒரு தீர்வைத் தேடினார்,[1] மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவரின் திட்டத்தின் அடிப்படையில் மலேசிய தீயணைப்பு வீரர்கள் குழுவை இந்தோனேசியாவுக்கு ஆபரேஷன் ஹேஸ் என்ற அடையாளப் பெயரில் அனுப்பினார். இது மலேசிய பொருளாதாரத்தின் மீது ஹேஸின் விளைவைத் தணிப்பதன் பொருட்டு செய்யப்பட்ட நடவடிக்கையாகும். மலேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஹேஸ் சேதத்தின் மதிப்பு 0.30 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
டிசம்பர் தொடக்கத்தில் பருவ மழை ஒரு குறுகிய கால அவகாசத்தைத் தந்தது. ஆனால் வறண்ட சூழ்நிலைகள் திரும்பியவுடன் தீ நிகழ்வுகள் மீண்டும் தொடங்கின. 1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும், 1998 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் புருனே, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை ஆகியவை காட்டுத் தீயின் புகையை உணர்ந்தன. 1997-98 காட்டுத் தீயின் விளைவா, இறுதியாக 8 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் எரிந்ததுடன், எண்ணற்ற மில்லியன் மக்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டனர்.