2020 இந்தியாவில் கொரோனாவைரசால் நாடுதழுவிய ஊரடங்கு
இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் ஊரடங்கு / From Wikipedia, the free encyclopedia
மார்ச் 24 அன்று, பிரதமர் நரேந்திர மோதியின் கீழ் இயங்கும் இந்திய அரசு 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிட்டது. இது இந்தியாவில் பரவிய கொரோனாவைரசு நோய் தடுப்பு நடவடிக்கையாக, இந்தியாவின் மொத்த 130 கோடி மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தியது. மார்ச் 22 அன்று 14 மணி நேர சுய ஊரடங்கு உத்தரவு மற்றும், அதைத் தொடர்ந்து நாட்டின் கோவிட்-19 பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில், தொடர்ச்சியான விதிமுறைகளை அமல்படுத்திய பின் இது உத்தரவிடப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் தேதி, அமைவிடம் ...
2020 இந்தியாவில் கொரோனாவைரசால் நாடுதழுவிய ஊரடங்கு | |
---|---|
Part of 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று | |
தேதி |
|
அமைவிடம் | |
காரணம் | 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று |
இலக்குகள் | இந்தியாவில் கொரோனாவைரசு பரவுவதைக் கட்டுப்படுத்துதல் |
முறைகள் |
|
முடிவு | நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது |
மூடு
இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாவைரசு பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோது (சுமார் 500), இந்த ஊரடங்கு உத்தரவிடப்பட்டது. இது அமெரிக்கா, ஐரோப்பா அல்லது சீனாவில் இருந்ததைப் போல தொற்றுநோய் நிலை மோசமடைவதைத் தடுக்கும் பொருட்டு எடுக்கப்பட்ட முடிவாகும்.[3]