2021 சுயஸ் கால்வாய் வழித்தடை
From Wikipedia, the free encyclopedia
2021 சுயஸ் கால்வாய் வழித்தடை என்பது (2021 Suez Canal obstruction) மார்ச் 23, 2021 அன்று, எவர் கிவ்வன், எனும் கோல்டன் கிளாஸ் கொள்கலன் கப்பல், எகிப்தின் சுயஸ் கால்வாயில் தரைத்தட்டியதால் ஏற்பட்ட போக்குவரத்து தடையினைக் குறிப்பதாகும்.[3] சுமார் 400-மீட்டர்-நீளம் (1,300 அடி) உள்ள இந்தக் கப்பல் மணிக்கு 74 கிலோ மீட்டர் வேகமுடைய புழுதிப் புயலில் சிக்கியது. இதனால் கப்பலின் போக்கு திசையினை மாற்றியது. கப்பல் கால்வாயின் தரைப்பகுதி ஒன்றில் சிக்கிக்கொண்டது.[4] ஆனால் அதிகாரிகள் இதற்கு புழுதிப்புயல் மட்டும் காரணமல்ல, தொழில்நுட்ப மனித தவறுகளும் பொறுப்பு என்கின்றனர். கால்வாயின் ஒரு கரைப்பகுதியில் கப்பல் தரைதட்டியதால், கால்வாயின் வழியாகக் கப்பல்கள் கடந்து செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது[5]
செயற்கைகோள் புகைப்படம், எவர் கிவ்வன் கப்பல் சுயஸ் கால்வாயினை தடைசெய்த காட்சி, மார்ச் 24 2021 | |
நாள் | 23–29 மார்ச்சு 2021 (2021-03-23 – 2021-03-29) |
---|---|
நேரம் | 07:40 EGY (05:40 ஒ. அ. நே.) |
காலம் | 6 நாள்-கள் and 7 மணிநேரம்-கள் |
அமைவிடம் | சுயஸ் கால்வாய், சுயஸ், எகிப்து |
புவியியல் ஆள்கூற்று | 30.0175°N 32.5800°E / 30.0175; 32.5800[1] |
வகை | தரைதட்டிய கப்பல் |
காரணம் | புழுதிப்புயல், அதிதீவிர காற்று |
உயிர்ச்சேதங்கள் | |
1 மரணம்(அடையாளம் தெரியாத)[2] |
மார்ச் 27, கப்பல் தரை தட்டிய நான்கு நாட்களுக்குப் பின்னர் சுமார் 300 கப்பல்களின் போக்குவரத்து தரைப்பட்டு சுயஸ் கால்வாய் வழியாகச் செல்ல வரிசையில் காத்து நிற்கின்றன. அதே நேரத்தில் நிலைமை சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் மார்ச் 27, 2021 வரையிலும் எவர் கிவ்வன் கப்பல் கால்வாயில் தான் சிக்கியுள்ளது[5][6] இரண்டு தடங்களைக் கொண்ட கால்வாயின் பகுதிக்கு தெற்கே இந்த தடங்கல் உள்ளதால், மற்ற கப்பல்கள் இந்தக் கப்பலைக் கடந்து செல்ல இயலவில்லை.[7]